27.11.2020
வி.பி. ஜெயக்குமார்
மாநிலத் துணைத் தலைவர், இந்து முன்னணி
தொலைபேசி: 04639-232240,
இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா?
கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு துறை ஆகியன கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது..
நவம்பர் 26 மும்பை கடல் பகுதி வழியாக நுழைந்த, பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் 8 இடங்களில் நடத்திய தாக்குதலில் 164பேர் உயிரிழந்தனர். அதே நாளான நேற்று தூத்துக்குடியில் 30 டன் ஹெராயின் போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகளுடன் பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.
கடந்த சில நாட்கள் முன்பு இராமநாதபுரம் பெரிய பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், ரகசிய பயிற்சி முகாம் நடத்தியுள்ளனர். அதில் 32 பேர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் சுமார் 130 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முகாமும் காவல்துறைக்குத் தெரியாமல் நடந்துள்ளது.
அமரர் வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள், தமிழக கடலோர பகுதிகள் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். மத்திய, மாநில அரசுகள் கடலோர காவல்படையை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று மும்பை தாக்குதலுக்கு முன்பே எச்சரித்தார். இன்று அவரது தீர்க்க தரிசனத்தை நாம் உணர்கிறோம்.
கடந்த ஜனவரி மாதம், கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வில்சனை, முஸ்லீம்கள் இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சட்டவிரோத, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை சிறைச்சாலைகளில் அடைக்கும்போது, அவர்களை சந்திக்க வருபவர்களையும், வழக்கு விசாரணையில் பயங்கரவாதிகளுக்குத் துணைபுரிபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் தமிழகத்தின் பாதுகாப்பில் மத்திய, மாநில அரசு புலானய்வுத் துறையும், கடலோர காவல்படையும் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்து தமிழகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,
வி.பி. ஜெயக்குமார்,
மாநிலத் துணைத் தலைவர்


இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சாதி கட்சிகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுபவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அரங்கேறி வரும் சூழலில்,நெல்லையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அரஜாகத்தின் உச்சமாக கடையை பூட்டு போட்டு வெளியூரில் இருந்து சில பயங்கரவாதிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளனர், இதில் கொடுமை என்னவென்றால் அந்த பகுதியில் வியாபாரம் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்சனை என்றால்தான் வரும் ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுக்க கட்சியாவது மண்ணாங்கட்டியாவது தன்மானமே முக்கியம் என கூறி அங்கு கடைவைத்திருந்த கடையின் உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என கட்சி பாராமல் இந்துக்கள் என்ற ஒற்றுமையுடன் இணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.இந்த சூழலில்தான் மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாதிகள் இன்றி சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டுருக்கிறார்கள்.இனி நெல்லையில் ஒற்றை இஸ்லாமிய கடைகளில் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும், எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.