ஆண்டுதோறும் மக்களை வீடுதோறும் சென்று சந்திக்கும் மக்கள் தொடர்பு இயக்கத்தினை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்துகிறது. தமிழகத்தில் இந்துக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை பற்றி வீட்டுக்கு வீடு சென்று அவர்களை நேரிடையாக சந்தித்து சுற்றறிக்கை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இந்த மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காலை முதல் மாலை வரை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைக் கமிட்டி ஊழியர்களும் குறைந்தது 100 வீடுகளாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் இந்துமுன்னணி களமிறங்குகிறது. இந்துக்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் இந்து மதத்தின் பெருமைகள், மதம் மாறினால் என்ன ஆகும், சந்தர்ப்பவாத அரசியல் போன்ற சிந்தனைகளை கையிலெடுத்து வீடுதோறும் வருகிறது இந்துமுன்னணி. 

வீரத் துறவி அழைக்கிறார்! விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம் வாரீர்
சென்னை…
இந்துமுன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களும், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்களும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது….
கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்துமுன்னணி பேரியக்கத்தால் மிகச் சிறப்பான வைகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவின் மூலம் சாதிய ஏற்றத் தாழ்வுகள் , பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் களையப்பட்டு இந்துக்கள் மத்தியில் ஒற்றுமை, விழிப்புணர்வு , எழுச்சி ஏற்பட்டு வருகிறது.
33 ஆண்டுகளுக்கு முன்பாக திருவல்லிக்கேணியில் ஒரு பிள்ளையாரை வைத்து ஆரம்பிக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று தமிழகம் முழுதும் இந்து எழுச்சிப் பெருவிழாவாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுதும் 1 லட்சம் பிள்ளையார்களுக்கும் மேலாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 10000 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதி உலாக்களும், 300 க்கும் அதிகமான முக்கிய நகரங்களில்,ஊர்களில் விசர்ஜன ஊர்வலமும் நடைபெறுகிறது.
விழா சிறப்பாக நடைபெற பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை நாடுகிறோம் எனவும்,
எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருளால் தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறோம்.
தமிழக முதல்வருடன் இந்துமுன்னணி தலைவர்கள் சந்திப்பு….
இந்துமுன்னணி பேரியக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா . சி . சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.பக்தன்., மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு.கார்த்கேயன் , மாநில செயலாளர் திரு.மனோகர்., சென்னை மாநகரத் தலைவர் திரு.இளங்கோவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக முன்வைத்த பொது அவைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்து இயக்க தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டவர் என்ற வகையில் மிகுந்த நன்றியை இந்துமுன்னணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
பவானி ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!!
ஈரோடு மேற்கு மாவட்டம் ….
பவானி ஒன்றியம் சலங்கபாளையம் குளத்தில் உள்ள மண்ணை சட்டவிரோதமாக அள்ள முயன்றவர்களிடம் ,அரசு அனுமதி கடிதத்தை காட்ட சொன்ன இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்குதல் மீது நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்ட தமிழக சுற்று சூழல் அமைச்சரை கண்டித்தும்….
மண்திருடிய குண்டர்கள் மீது வழக்கு பதிவுசெய்தும் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும்
இந்து முன்னணி நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வரும் கோபி D.S.P. செல்வம் அவர்களை இட மாறுதல் செய்ய கோரியும் ….
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.S.செந்தில் குமார் தலைமையில் 750 க்கும் மேற்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!! இதில் B.J.P. மாநில செயலாளர் திரு.செந்தில் பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டு கைதானர்.
விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா
தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் மக்கள் விழாக்களில் முதன்மையானது ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா. பட்டி தொட்டி எங்கும் வீதிகள் தோறும் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. என்று அதே தமிழகத்தில் விநாயகர் வீர உலா வருகிறார் எனில் இந்துமுன்னணி மக்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று போராடியதுதான் காரணம்.
நீதித்துறையின் நடவடிக்கை மிகுந்த கவலை அளிக்கிறது – இராம.கோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை
நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு
மிகுந்த கவலை அளிக்கிறது
1994ஆம் ஆண்டு இந்து முன்னணியின் மாநில தலைவர் அட்வகேட் ராஜகோபால் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஐவர் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். இவ்வழக்கில் நடுநிலையாளர்கள் மனதில் எழும் கேள்விகள் ஊடகத்தின் மூலம் தேசத்தின் முன் வைக்கிறோம்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றம் இதில் தலையிட என்ன அவசியம் வந்தது?
இந்த வழக்கில் குற்றவாளிகள் என கீழ்க்கோர்ட் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை தண்டனை வழங்கி, தண்டனையை உறுதி செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதானால், எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றமே நேரில் விசாரிக்கலாமா?
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினாலும் அதற்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவார்கள் என்பதை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டார்களா?
இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த கற்பக விநாயகம் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடி விடுதலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு கிரிமினல் குற்றவாளி, அதிலும் மத அடிப்படை பயங்கரவாதிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வாதாடுவது, நீதிபதியின் மாண்பிற்கு ஏற்ற செயலா? இப்படி கிரிமனல் வக்கீலாக செயல்படுவதானால், இவரது நீதிபதிக்கான அரசு சலுகை, அரசின் நிதி உதவிகளை திரும்ப ஒப்படைப்பதுடன், இனி எந்த நிலையிலும் இவர் நீதிபதி அல்லது நீதியரசர் என்ற பெருமைமிகு குறியீட்டை இவரது பெயருக்கு முன் போட்டுக்கொள்ள அனுமதிக்கூடாது இல்லையா?
இவர் பணத்திற்காக குற்றவாளிகள் தரப்பில் வாதாடியிருப்பதால், இவர் நீதிபதியாக செயல்பட்டது குறித்த ஐயம் எழுகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த ஒருவர், பணத்திற்காக வாதாடுவாரேயானால், இதில் உள்நோக்கம் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.இவரால் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
மேலும், இனி இவரை ஓய்வு பெற்ற நீதிபதி என்ற மதிப்பில் சமூக பிரச்னைகளில் விசாரணை செய்ய கமிஷன் போடும்போது நியமித்துவிடக்கூடாது என மாநில, மத்திய அரசுகளை, உச்சநீதி மன்றத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்த வழக்கில் இரண்டு கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக இருந்த குர்ஷித் அலம்கான் வாதாடியிருக்கிறார். மத்திய அமைச்சராக பொறுப்பில் இருந்தவர், நடுநிலையாக செயல்படுவேன் என எடுத்துக்கொண்டு பதவி வகித்தவர், தற்போது பதவியில் இல்லாதபோது, குற்றவாளிகளுக்கு, அதிலும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு வாதிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அலம்கானின் செயல்பாடு, குற்றவாளிகள் முஸ்லீம்கள் என்பதால் வாதிடுகிறார் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கணக்கனோர் ஈவுஇரக்கமின்றி இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் தண்டனைப் பெற்றவர்கள் நிரபராதி என விடுதலை ஆகும்போது, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஊக்கம் கொடுப்பதாக இது அமையும் என எச்சரிக்கிறோம்.
மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்த்துவிட்டால், அது பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதித்துறையின் நடவடிக்கை கண்ணிய குறைவாகவும், நீதிபதிகளின் பேச்சு, செயல்பாடு அவர்கள் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாகவும் இருந்து வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் மீது மக்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இன்றோ அது கேள்விக்குறியாகி வருகிறது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது தமிழக அரசு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நெல்லை மண்டல மாநாடு
CBI விசாரனை கோரி போராட்டம் – இந்து முன்னணி மாநிலத் தலைவர் அறிவிப்பு..
#இந்துமுன்னணி கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் #சசிக்குமார் கொலை நடந்து 5 மாதங்கள் ஆகியும் தமிழக #சிபிசிஐடி காவல்துறையால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.
சசிக்குமார் கொலைக்கு நீதி கேட்டு வழக்கை #CBI விசாரனைக்கு மாற்ற வலியுறித்தி ஏப்ரல் 16 அன்று தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களிள் மாபெரும் போராட்டம் நடத்துவது என இந்துமுன்னணி மாநில நிர்வாககுழு முடிவு செய்துள்ளது என மாநில தலைவர் காடேஸ்வரா #சுப்பிரமணியம் ஜி அறிவித்துள்ளார்.

இராம கோபாலன் பத்திரிக்கை அறிக்கை – மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்புக்கு கண்டனம்
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
17-3-2017
பத்திரிகை அறிக்கை
தமிழ்நாட்டில் பரவி வரும் நக்ஸல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு தான் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்பு..
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படித்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். முத்துக்கிருஷ்ணனை இழந்த துக்கத்தில் இருந்த அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, வேண்டிய உதவிகளை செய்து, பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு வரும் வரை உடனிருந்து உதவியவர் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
துக்க வீட்டில் கூட அரசியல் செய்வது அநாகரிகமான செயல். அதனைவிட துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் மீது நக்ஸல் பயங்கரவாதி சாலமன் என்பவன் செருப்பை வீசியிருக்கிறான். இடதுசாரி பயங்கரவாத அமைப்புகள், விடுதலை சிறுத்தை போன்ற அமைப்பினர் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் போட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.
மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசைத் திருப்ப திருவள்ளூரைச் சேர்ந்த சாலமன், சேலம் சென்று இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளான். அவன், இந்திய மக்கள் முன்னணி என்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்ஸல் அமைப்பின் உறுப்பினன். திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற இந்துவிற்கு பிறந்த மதமாறிப் போனவன் தான் இந்த சாலமன்.
முத்துகிருஷ்ணனின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். அதே சமயத்தில் நக்ஸல் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை இதனை அரசியலாக்க ஏன் துடிக்கின்றன?
இதே நக்ஸல் அமைப்புதான் விழுப்புரத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். படையில் வேலை பார்த்த சங்கரை கொன்றது. இடதுசாரி பயங்கரவாத அமைப்பான நக்ஸல் இயக்கத்தினர் தமிழனை கொன்றதை எந்த கட்சியும் கண்டிக்கவில்லை?!
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியில் ஆளும் கட்சியின் ஒரே எம்.பி.யான இவர் மத்திய அமைச்சராகி, தமிழகத்தின் நலனில் கவனம் செலுத்தி பல சாதனை படைத்து வருகிறார்.
இதனை எல்லாம் மறந்து, அநாகரிக செயலை அரங்கேற்றியிருக்கின்றனர் பிரிவினைவாதிகள். இடதுசாரி பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட விஷயம் கிடைக்காதா என அலைகிறார்கள்.
பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொண்ட இடதுசாரி பயங்கரவாதியின் செயலை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இடதுசாரி பயங்கரவாதம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்று இந்து முன்னணி மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இடதுசாரி பயங்கரவாத்தை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
செங்கல்பட்டு பெருமாள் மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ பாதிரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன்
காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள அழகு சமுத்திரம் பஞ்சாயத்திற்குட்பட்ட மகா சக்தி பொன்னியம்மன்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள பெருமாள் மலை மீது ஆண்டுதோறும் கண்ணபிரான் உற்சவம் நடைபெற்று வருகிறது. மலை மீது பெருமாளின் திருமண் இட்டு இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.
இக்கோயில் மலை அழகுசமுத்திரம் பஞ்சாயத்திற்கு சொந்தமானதென செங்கல்பட்டு நீதிமன்றத்தால் 18.10.1996இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் இம்மலையில் சிலுவையை நட்டனர். உடனடியாக கிராம நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்குப்பட்டு, அது அகற்றப்பட்டது. 2006இல் மலையில் திடீரென்று சர்ச் கட்ட ஊரில் கலவரம் ஏற்பட்டது. இதற்குக் காரணமான ஏழு கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிரி எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டார்.
அச்சிரபாக்கம் பாதிரி ஜேக்கப், ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான நீர்வழியை கால்வாயை மூடி அதன் மீது சர்ச்க்கு அடிக்கல் நாட்டினார். திடீரென்று, 24.12.2016 இரவு பெருமாள் மலை முழுவதையும் ஆக்கிரமித்து வனத்துறையால் வளர்க்கப்பட்டு வந்த மரங்களை ஜெ.சி.பி. இயந்திரம் கொண்டு வேரோடு அகற்றினர். பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவங்களான பொம்மைகளை அமைத்தனர். இதனைக் கண்டித்து பொதுமக்கள், இந்து முன்னணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டார். ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கடைசி பொம்மையை அகற்றவிடாமல் தடுத்துவிட்டார்.
இதனை எதிர்த்து தொடர்ந்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் 4.3.2017 வழக்கமாக நடைபெறும் சனிக்கிழமை பஜனை ஊர்வலத்தின் போது சோகண்டியை சார்ந்த கிறிஸ்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பக்தர்கள் மீது மோதியதுடன், ஆயுதங்களால் தாக்கியும், சாமியை அவதூறாக பேசியும், மிரட்டினர். ஊர் மக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதற்குக் காரணமான மதமோதல்களை உருவாக்கி கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஜேக்கப் பாதிரியை விட்டுவிட்டது.
இதுபோன்ற தேசவிரோத, மதவெறி செயலைக் கண்டித்து இந்துக்கள் 6.3.2017 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 7.3.2017 பேச்சு வார்த்தைக்கு அழைத்த ஆர்.டி.ஓ. ஜெயசீலன், கிராம மக்களிடம் தான் எழுதி வைத்திருந்த பேப்பரில் கையெழுத்திட நிர்பந்தித்துள்ளார். மீறினால், 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் குடியிருப்புகளை அகற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோதமாக செயல்படும் ஆர்.டி.ஓ. ஜெயசீலன் மீது துறை ரீதியாலன நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், சிலுவையை நட்டு மலைகளை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ சதியை முறியடிக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)







