Tag Archives: #antihindu

வீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .

14-8-2019

பத்திரிகை அறிக்கை

தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது.

அந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.

மேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.

ஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.

1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா?

2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..?

3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா? இது மதத்தின் அடையாளமாகவில்லையா? இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன?

4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

6. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்?!

7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.

எனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

வீரத்துறவி அறிக்கை- தேர்தல் கமிஷன் வீரமணி, கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்காமல்  ஏன் பாரபட்சம் காட்டுகிறது…? 

16-5-2019

பத்திரிகை அறிக்கை
மத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த
தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா?!
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம், அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிட கழக தலைவர் வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார். இது குறித்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தனர். ஆனால், வீரமணி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தடுக்கக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஆணையரிடம் புகார் கொடுத்த பின்னரும் தொலைக்காட்சி/சமூக ஊடகங்களில் பேட்டி அளித்த வீரமணி அப்படித்தான் பேசுவேன், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்றார். மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் யார் தேர்தல் பிரச்சாரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை பேசினாலும், அவர்கள் பிரச்சாரத்திற்கு தேர்தல் அதிகாரிகள் தடைவிதிக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையானது.
அதன் தொடர்ச்சியாக, திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மையம் என்ற கட்சித் தலைவருமாக இருக்கும் கமலஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 காவல்நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.
இதுவரை நாம் கொடுத்துள்ள புகார்கள் மீது தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
மகாத்மா காந்திஜி, கோட்சே ஆகிய இருவரும் இந்து தான். இதில் எங்கிருந்து மத தீவிரவாதம் வருகிறது? ராஜீவ் காந்தியைக் கொன்றது எந்த தீவிரவாதம்? திருபுவனம் ராமலிங்கத்தை கொன்றது எந்த தீவிரவாதம்? இந்து இயக்க தலைவர்களை வெட்டிக் கொன்றார்களே அது எந்த தீவிரவாதம்? இதையெல்லாம் கமலஹாசன் இதுவரை ஏன் பேசவில்லை?
கமலஹாசன் மக்களை திசைத்திருப்ப மத பிரிவனையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? என்பதே நமது கேள்வி.
நேற்றும், மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமலஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பிரச்சாரத்தை காவல்துறையும், தேர்தல் கமிஷனும் வேடிக்கை பார்க்கும் என்றால், மக்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன? மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தேர்தல் கமிஷன், கமலஹாசன், வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.

ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

மக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.

திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.

நவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா? அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.

இப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

மேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

கமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .

இன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.

வீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு  ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..

16-4-2019
பத்திரிகை அறிக்கை
ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை
சுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்போம்.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.
மேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

39 ஆண்டுகளாக இந்துமுன்னணி முயற்சித்தது சாத்தியமாகி இருக்கிறது – இந்து விழிப்புணர்வு ..!

கடந்த 50 ஆண்டுகளூக்கு
மேலாக இந்துமத கடவுள்களை இழிவுபடுத்துவோர் தங்குதடையின்றி அரசியலில் வெற்றிகளை பெற்று வந்தது , இந்துமத உணர்வாளர்களின் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக குத்தி வந்தது.

இந்துமத பாதுகாப்பிற்காக வாக்களிப்போர் என ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரை உருவாக்க வேண்டும் அப்போது மட்டுமே இந்துக்களுக்கு மரியாதை, பாதுகாப்பு இதெல்லாம் சாத்தியமாகும் என இந்துமத பெரியவர்கள் ஆதங்கப்பட்டனர்.

இன்று அது சாத்தியமாகி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

சபரிமலை நம்பிக்கையை இழிவு படுத்தியது, ஸ்ரீகிருஷ்ணரை கேவலமாகப் பேசியது,
ஸ்டாலின் கனிமொழியின் இந்து மத வெறுப்பு என இந்துக்கள் எதையும் மறக்கவில்லை.

கனிசமான இந்துக்கள் இந்த முறை இந்துமத எதிர்ப்பு கூட்டணியான திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.

நான் இந்து மதத்திற்கு எதிரானவன்அல்ல என்று தற்போது ஸ்டாலின் கதறுகிறார்.

திருமாவளவனோ எனது சொந்த செலவில் சிவாலயம் கட்டி வருவதாக கூறுகிறார்.

கனிமொழியோ நெற்றியிலே குங்குமத்தோடு வாக்கு சேகரிக்கிறார்..

இதெல்லாம் தேர்தல் ஏமாற்று வேலை என்றாலும் இந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை இவர்கள் உணர்ந்துள்ளதால் இந்த மாற்றம் வந்துள்ளது.

வெற்றியோ தோல்வியோ இந்த தேர்தலில் கனிசமான எண்ணிக்கையில் இந்துஉணர்வோடு வாக்களிக்க இருப்பது புதிய மாற்றம் ஆகும்..

இந்த மாற்றத்தை ஏற்படுத்த கடந்த
39ஆண்டுகளாக இந்துமுன்னணி தொடந்து போராடி வந்துள்ளது. தற்போது அது சாத்தியமாகி இருக்கிறது…!

ஜெய் ஹிந்த்..!
பாரத் மாதா கி ஜெய்..!

இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .

இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .

திருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .

இந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
இதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.
பலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

தேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.

ஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.

தகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா?

இவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா?

இவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா??

திட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை
தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .

இதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

திமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .

இனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.

மக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.

இராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

இராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்

பத்திரிகை அறிக்கை

தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக
கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா?

நேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.

திராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.

தேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் தொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள்? என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.

எனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

திமுகவில் இருக்கும் தன்மானமும்,  சுயமரியாதை உள்ள இந்துக்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை

திமுக திருந்தாத கட்சி, திமுகவில் இருக்கும் தன்மானமும்,

சுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்..
திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின், நேற்று ஒரு இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, இந்துக்களின் வேள்வி திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார், திமுக திருந்தவே திருந்தாது என்பதை இவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
திமுகவின் தலைவராக இருந்தவரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதி, ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு, இஸ்லாத்தை புகழ்ந்து பேசியிருக்கலாம். ஆனால், அங்குபோய் இந்துக்களின் பழக்க வழக்கங்களை கேலி செய்து புண்படுத்துவார். அந்த வழியில், தற்போது ஸ்டாலின் செயல்பட்டுள்ளார்.
ஈவெரா காலம், கருணாநிதி காலம் மாதிரி இப்போது இந்து சமுதாயம் இல்லை என்பதை திமுகவிற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது. இந்து என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது. அதனை எதிர்கொள்ளாமல் என்னவெல்லாம் சாமாதானமாக பேசினார் கருணாநிதி என்பதை இந்து சமுதாயம் மறக்கவில்லை. திமுகவில் இருக்கும் சுயமரியாதையும் தன்மானமும் உள்ள இந்துக்கள் சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்குக் கண்டனத்தை தெரிவிக்க வேண்டுகிறோம்.
தமிழ் இலக்கியங்கள் ஐவகை திருமணங்களை குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் வேள்வி திருமண சடங்கு உள்ளது. அது அறிவியல் பூர்வமான சடங்கு. அதே சமயம் பலவகையான திருமண சடங்குகள் இந்து சமுதாயத்தில் இருக்கிறது. இதனை எல்லாம் இந்து திருமண சட்டம் ஏற்றும் கொண்டுள்ளது. திருமணத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நபரும் இந்து சமுதாயத்தில் குறிக்கீடு செய்ய முடியாது. அவரவர் சமுதாய வழக்கத்தை அவரவர் குடும்பமே முடிவு செய்கிறது.
திமுக தலைவர் நடத்தும் திருமண சடங்கான, திருமண விழாவை எழவு வீடாக நினைத்து தனது சொந்த கருத்தையும், கட்சி அரசியலையும் புகுந்தும் அநாகரிக திருமணமும் இந்து திருமணத்தின் படிதான் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் சமுதாய திருமணங்களில் திமுக தலையீடவும் முடியாது, அந்த மதங்கள் அதற்கு இடமும் தருவதில்லை. அங்குபோய் கலந்துகொள்ளலாம், அந்த அளவு மட்டுமே திமுக தலைவருக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள். திருமணத்தை நடத்துவது பாதிரியார், முல்லா மௌல்வி போன்றோர் தான்.
இஸ்லாமிய திருமண வரவேற்பு விழாவிற்கு போனதற்கு, திமுகவின் பாணியில் அங்கு இல்லாத நிக்காஹ் செய்து கொண்ட தம்பதிகளை வாழ்த்திவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். அங்கு போய் இந்து திருமணங்களைப் பற்றி கேவலமாக பேசியிருப்பது ஸ்டாலின், திமுகவை இந்து விரோத கட்சியாக கொண்டு செல்லவே விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.
கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அவரவர் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தினால், வெகுண்டெழுகிறார்கள். ஆனால் இந்துக்கள் அமைதியாக இருப்பதால் கோழைகளாக நினைத்து, ஸ்டாலின் போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அரசியல் கட்சி என்பது அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும், கருத்து தெரிவிக்க வேண்டும். திமுக திருந்தாத கட்சி, அதன் இறுதி அத்தியாயத்தை எழுதவே ஸ்டாலின் இதுபோல் நடந்துகொள்கிறார் என கருதுகிறோம்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஸ்டாலின் தனது பேச்சிற்கு இந்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

வீரத்துறவி அறிக்கை- லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
21-1-2019

பத்திரிகை அறிக்கை

அநாகரிமாக, தேசவிரோதமாக செயல்படும் லயோலா கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நேற்று லயோலா கல்லூரியில், ஓவிய கண்காட்சி ஒன்றை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் துவக்கி வைத்துள்ளார். இந்து மத நம்பிக்கைகளை கொச்சைபடுத்தியும், மத வெறுப்பை வளர்க்கும் விதமாகவும், பாரத மாதாவையும், பாரத பண்பாட்டையும், பாரத பிரதமரையும் அவமதித்தும், எழுத்திலோ, படத்திலோ காட்டமுடியாக அநாகரிகமான ஓவியங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதனை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஓர் அரங்கில் நடந்தாலும், இது பொது நிகழ்ச்சி. அநாகரிமான முறையில் இதுபோன்று வேறு மதங்களைப் பற்றியோ, அரசியல் தலைவர்களை பற்றியோ சித்திரிக்கப்பட்டிருந்தால் காவல்துறையின் நடவடிக்கை என்னவாக இருந்திருக்கும்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொடுங்கோலன் ஔரங்கசீப் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்தரித்து ஓவிய கண்காட்சியை ஒரு பெண் நடத்தியபோது (இந்த கண்காட்சி வரலாற்று சம்பவங்களை பின்னணியில், நாகரிகமான முறையில் வரையப்பட்டிருந்தவை) தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தது என்பதை நினைவு கூர்கிறோம்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இந்த ஓவிய கண்காட்சியை திறந்தது வைத்துடன் பார்வையிட்டிருக்கிறார். அவரது தலைமையில், வக்கிரமான, பாலியல் படங்கள் இக்கண்காட்சி நடைபெற்றிருக்கிறது என்றால், அவரது நம்பகத் தன்மையை, நடுநிலைமையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்று வரும்போது, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அதிகாரிகளானாலும் சரி, அரசியல்வாதிகளானாலும் சரி, அவர்கள் மதம் சார்ந்து இருப்பதோடு மட்டுமல்ல, இந்து மதத்தின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த, கேவலப்படுத்தவும் ஆதரவு தருகிறார்கள் என்பதற்கு மேலும் இந்நிகழ்ச்சி ஒரு சான்று.

தேசவிரோத, மத வெறுப்பை மக்களிடம் ஏற்படுத்தி மதக் கலவரத்தை உண்டாக்கும் தீயநோக்கோடு பல காரியங்களுக்கு லயோலா கல்லூரி மையமாக இருந்து வருகிறது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி என்றாலும், இந்திய சட்டத்திற்குக் கட்டுப்பட்டதே ஆகும். மேலும் மனிதவள மேம்பாட்டுத்துறையினால் தான் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய நிதியை பெறும் கல்லூரியாக லயோலா கல்லூரி இருந்து வருகிறது. எனவே, தேசவிரோத செயல்களில் ஈடுபடும் லயோலா கல்லூரி அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்பை வளர்க்கும் இக்கண்காட்சியை நடத்திய லயோலா கல்லூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு இன்று அளிக்கப்படுகிறது. அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நடுநிலையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய, ஆன்மிக பெரியோர்கள் அநாகரிமான, மதவெறுப்பை வளர்க்கும் இச்செயலை மனந்திறந்து கண்டிக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

இராம கோபாலன்