Tag Archives: ஸ்ரீவில்லிபுத்தூர்

முடியாததை!! முடித்து காட்டியது !! இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு

முடியாததை!!
முடித்து காட்டியது !!
இந்து முன்னணி .

எங்கே…?என்ன….?

தூத்துக்குடி மாநகர்
மேட்டுப்பட்டி, முத்தரையர் நகர் திரேஸ்புரம்(பெரிய ஊர்),விவேகானந்தர் நகர் (கரைவலை),புதிய துறைமுகம்( சுனாமி காலனி). இந்த ஊர்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது ….எதற்காக?

1.முத்தரையர் நகர் மீனவர்களை மணப்பாடு,ஆலந்தலை,போன்ற ஊர்களில் கிறிஸ்தவ மீனவர்கள் அவர்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று இந்து மீனவர்களின் படகுகளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் பஞ்சாயத்து செய்து ஒரு லட்ச ரூபாயை கிறிஸ்துவ சர்ச்க்கு அபதாரமாக கொடுத்தபின் படகுகளை விடுவித்தனர். தகவல் அறிந்த இந்துமுன்னணி இந்த விஷயத்தில் களமிறங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மீன்வளத்துறை அமைச்சர் ,ஆகியோரிடம் மனுக்களை கொடுத்த பின் இன்றுவரை அந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

2. தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த நீரெடுக்க சங்கு முக விநாயகர் ஆலயத்திற்கு செல்வதுதான் வழக்கம்.
அந்த கோவில் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து பின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அந்த ஆலயம் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

3.தூத்துக்குடி துறைமுகம் சார்பாக அந்தப் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் கழிப்பறை, குளியலறை,வலைக் கூடம்,மீனவர்களுக்கான உபகரணங்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

4.விவேகானந்தர் நகர் (கரைவலை) பகுதி மீனவர்களை கிறிஸ்துவ மீனவர்களால் மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்த போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் நேரடியாக சென்று இது சம்பந்தமாக பேசி இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்களையெல்லாம் இணைத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவினை இந்து முன்னணி சார்பாக மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.

தேர்தல் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கண்டனத்திற்கு உரியது – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் தேர்தல் சின்னம் வரையப்பட்டு இருப்பதாக கோவிலின் அடிப்படை விதிகளை மீறி, வழிபாட்டு உரிமையை பறிக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் .

இந்த செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தலுக்கு என ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய சின்னங்களில் பல அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் சின்னமான ‘கை’ இல்லாத செயல் எதுவும் இல்லை, கையை வெட்டி விட முடியாது .

ஆம் ஆத்மியின் சின்னமான ‘தொடப்பக்கட்டை’ அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது அதை ஒதுக்க முடியாது.

மக்கள் நீதி மையத்தின் ‘டார்ச்லைட்’ சின்னத்தை இனி கடைகளில் விற்கக்கூடாது என்று கூறமுடியாது.

சூரியன் உதிக்கிறது, மறைகிறது எனவே சூரியனே மறைந்து விடு! உதிக்காதே!! என்று கூறமுடியாது.

‘இரட்டை இலை’ எங்கெங்கு காணினும் இருக்கும், மரங்களை எல்லாம் வெட்டிவிட முடியாது .

இன்று கோவிலில் நடந்திருக்கக் கூடிய இந்த செயல் மிகமிக கேலிக்குரியது மாத்திரமல்ல, ஹிந்துக்களை நோக்கி திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்ற ஒரு தாக்குதல் என்று கூட சொல்லலாம்.

கோவிலுக்குள் தெய்வங்கள் வீற்றிருப்பது குறிப்பாக பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது தாமரைப் பூவில் தான்.ஆகவே தாமரைப்பூ என்பது கோவில்களின் பல இடங்களில் கோல வடிவமாகவோ, சிற்ப வடிவிலோ காணலாம்.

எனவே இதை தேர்தல் சின்னம் என்று கூறி நடவடிக்கை என்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

மேலும் ஆலயத்திற்குள் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில்லை, எனவே ஆலயத்திற்குள் சென்று அந்த அங்கு போடப்பட்டிருந்த கோலத்தை அழிக்க சொல்வது என்பது வழிபாட்டு உரிமைகளை தடுக்கக் கூடிய ஒரு விஷயம்.

இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது .

தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அதே சமயத்தில் இதுபோல முறையற்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்யாதிருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.