Tag Archives: வெற்றிச்செய்திகள்

வையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி

16.7.18

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.

இங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.

எட்டு ஆண்டுகள் முன்பு
தலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.
ஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.
அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக
பிரச்சினை இருந்து வருகிறது.
தலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .
ஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு
காவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.
இது தொடர்கதை ஆனது .

இந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.

இந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

கலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .
ஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.
இரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
தற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.

ஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை

பெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.
ஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.

ஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.

மக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.

உடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.

இச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.

ஊர்மக்களை சந்தித்து நம்பிக்கையூட்டினோம்.

அடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.

உடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.

உடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.

அதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.

ஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.

இதுதான் #இந்துமுன்னணி

ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.