Tag Archives: #ரம்ஜான்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

தூத்துக்குடி- சட்டவிரோத கூட்டு வழிபாடுகள், நோன்புக் கஞ்சி வழங்குவது நடக்கின்றன – ஆட்சியருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

அனுப்புநர்
V.P.ஜெயக்குமார்,
மாநில துணைத் தலைவர்
‌இந்து முன்னணி

பெறுநர்
உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
தூத்துக்குடி.

ஐயா :
தூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகர் 1 ஆம் தெருவில் உள்ள மசூதியில் மாலை 7.30 மணிக்கு அரசு பிரப்பித்துள்ள 144 வழிமுறைகளுக்கு மாறாக கூம்பு ஒலிபெருக்கியில் (கூம்பு வடிவ ஒலி பெருக்கி உபயோகிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ள நிலையிலும்) அழைப்பு விடுத்து நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது , அதுமட்டும் அல்லாமல் CAA சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவும் திரட்டப்படுகிறது, விசாரித்தால் “மைக் செக்” என்று கூறுகிறார்கள்.

அதே போல் பிரையன்ட் நகர் 9 ஆம் தெருவில் உள்ள இம்மானுவேல் சர்ச்சில் கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது, தாசில்தார் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தும், கூட்டு பிரார்த்தனை நடந்துகொண்டே தான் இருக்கிறது. தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனால் தூத்துக்குடி சிவன் கோவில் வாசலை திரை போடு மூடியுள்ளனர், மாவட்ட நிர்வாகத்திடம் சுவாமியை மறைக்க வேண்டாம் திரையை எடுங்கள் என வைக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஜெயராணி தெரு, தெற்கு புதுத்தெரு , மீ.கா. தெருக்களில் சுமார் 40 க்கு மேற்பட்ட வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். பர்மா காலனி, செல்வநாயகபுரம் பகுதியில் வாங்கு ஓதுவதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலே கூறியுள்ள விடயங்களுக்கு தாங்கள் சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

தீபாவளி,பொங்கல் இனாம் வழங்குவது போல் ரம்ஜான் நோன்பு அரிசியை அனைவருக்கும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துமுன்னணி மனு தாக்கல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450 மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக 2895 பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு 16.4.3020 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக இந்துமுன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சென்னை உயர்நிதிமன்றத்தில் தடை உத்திரவு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்…

தை பொங்கலுக்கு அரிசியும், வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும் எனவும்

மேலும் கொரோணோ ஊரடங்கு காலத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூலம் வழங்குவதால் கொரோணோ தொற்று மேலும் பரவலுக்கு வழி ஏற்படும்

அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. எனவே ரேசன் கடைகள் மூலம் அதனை அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும்

எனவே 16.4.2020 ல் அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் பள்ளிவாசல் மூலம் முஸ்லீம்களுக்கு மட்டும் அரிசி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது

இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு T.அண்ணாமலை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்

இம் மனு நாளை திங்கள் கிழமை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – மாநில செயலாளர் குற்றாலநாதன்

16.04.2020

அனுப்புநர்
கா.குற்றாலநாதன்
திருநெல்வேலி

பெறுநர்

சென்னை

வணக்கம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 ) தை பொங்கலுக்கு அரிசியும் வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும். மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது.

2. ) அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. தற்போதுள்ள கொரோனா தடை காலத்திலும் அந்த PDSஅமைப்பு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

பொது விநியோக திட்டத்தில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு வழங்கும் அரிசியை பள்ளிவாசலில் வழங்குவது சரியா ? தமிழகத்தில் கொரோணா பரவலுக்கு பெருமளவு காரணம் என்ன என்பதை அறிந்த அரசே மீண்டும் சமூக பரவலுக்கு வழிவகுக்கலாமா ?

3) ஊரடங்கு உத்தரவினால் கோவில்கள், சர்ச்சுகள் எல்லாம் கடந்த 21 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அரிசி வழங்குவதற்காக பள்ளிவாசலை மட்டும் திறக்க சொல்வது நியாயமா?

தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம், புனித வெள்ளி, ஈஸ்டர் என எந்த பண்டிகைக்கும் எந்த வழிபாட்டு தலத்திலும் எந்த மக்களும் அனுமதிக்கபடாத நிலையில் பள்ளிவாசலில் அரிசி வாங்க மட்டும்திறக்கலாமா ? பொதுமக்களை அனுமதிக்கலாமா ? இது பாரபட்சமான நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகிறார்கள்

4 ) கோவில்களையும் சர்ச்சைகளையும் திறந்தால் மட்டும் நோய் தொற்று பரவும் . ரம்ஜான் அரிசி கொடுக்க பள்ளிவாசலை திறந்து கூட்டம் சேர்த்தால் நோய் பெற்று பரவாதா?

ஆகவே ரமலான் நோன்பு அரிசியை வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்களை திரட்டி அரிசி வழங்கி கொரோணா தொற்று பரவலுக்கு அரசே வழிவகுக்காமல் தீபாவளி, பொங்கல் இனாம் போல அனைத்து மக்களுக்கும் மதசார்பற்ற அரசு மத பாகுபாடின்றி பொது விநியோக திட்டம் மூலம் ரேசன் கடைகளில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

கா.குற்றாலநாதன்

மாநில செயலாளர்

இந்துமுன்னணி
நெல்லை