Tag Archives: #முதலமைச்சர்

முதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்
இந்து முன்னணி பேரியக்கத்துடன் இணைக்கப்பட்டது.
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. தொலைபேசி : 044 28457676, 9841769852

த. மனோகரன்
மாநில தலைவர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.

பொருள்: ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க அனுமதி அளிப்பது வேண்டி.

தங்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் கொரானா நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க பலவிதமான வழிமுறைகளை கையாண்டதின் விளைவாக, தமிழகத்திலும், பாரதத்திலும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அரசு, பலவிதமான நிவாரண உதவிகள் செய்து வந்தாலும், பல லட்சம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடரும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் அளித்த நிவாரண உதவிகள் கிடைத்தாலும், ஆட்டோ பராமரிப்பு, அதற்குரிய தவணை தொகை மற்றும் குடும்ப செலவினங்கள் ஆகியன தொழிலாளர்களை பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

எனவே, ஆட்டோ இயங்குவதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறோம்.
நன்றி,

என்றும் தேசியப் பணியில்
த. மனோகரன்
மாநிலத் தலைவர்

ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

05.05.2020
மாண்புமிகு முதல்வர் அவர்கள்., தமிழக அரசு – சென்னை.அன்புடையீர் வணக்கம்,பொருள் : ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர். அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.நலவாரியங்களில் பதிவுசெய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சிறு உதவிகளை செய்து வந்தாலும், உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.இதில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் சென்றடையவில்லை.ஆகவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எத்தகைய உதவிகளை தமிழக அரசு செய்ததோ, அதே போல பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நல உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.இந்த நேரத்தில் பல தொழில்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் இதே நிலை நீடித்தால் பசியின் கொடுமையால் பல இழப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்பு உள்ளது.இதனை தாங்கள் கருத்தில் கொண்டு நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.என்றும் தாயக பணியில்காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்இணைப்பு :
1. மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
2. உயர்திரு ஆணையாளர் அவர்கள் – தொழிலாளர் நலத்துறை
3. உயர்திரு. இயக்குனர் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியம்

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்