Tag Archives: மிஷனரிகள்

குன்றிருக்கும் இடமெல்லாம் குருசு ✝️ இருக்கும் இடமா?? அச்சிறுப்பாக்கத்தில் அராஜகம்

காஞ்சி மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மலைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

அங்கு 1200 ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த மலையின் புனிதத்துவத்தை கெடுப்பதற்காக கிறிஸ்தவர்கள் கோவிலின் அருகிலேயே உள்ள குன்றில் சிலுவையை நட்டு மரியே வாழ்க என்று எழுதி மலையைச் சுற்றியுள்ள பொதுமக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர்.

இந்த சதிக்கு பல வெளிநாட்டு மிஷனரிகள் பண உதவி செய்தன.

அதே வஜ்ரகிரி மலையில் சிவ சிவ என்று எழுதியதற்காக இந்துக்கள் மீது வனத்துறை அதிகாரி கிறிஸ்தவர் என்பதால் அபராதம் விதித்தார்.

கிறிஸ்தவர்கள் மலையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அந்தப்பகுதியின் பஞ்சாயத்து தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வகைகளிலும் பணம் கொடுத்து மலை ஆக்கிரமிப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்துமுன்னணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பலமுறை வீரத்துறவி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியது .

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் செய்தது.

கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் , வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரி என அத்தனை அதிகாரிகளையும் சந்தித்து புகார் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்திலேயே தடுப்பது போன்று கண்துடைப்பு செய்த அதிகாரிகள், கிறிஸ்தவர்கள் இரவில் கட்டிடங்கள் கட்டும்போது கண்டும் காணாமல் இருந்தனர்.

ஆகவே கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டே இருந்தனர்.

ஐஏஎஸ் , ஐபிஎஸ் என அத்தனை கிறிஸ்தவ அதிகாரிகளும் அநீதிக்கு துணை போயினர்.

நீதிக்கு ஒரு இந்து அதிகாரியும் துணையில்லை தொடர்ந்து இந்துமுன்னணி இயக்கம் புகார் கொடுப்பதும், போராடுவதுமாக ஆண்டுகள் கடந்து போயின.

நீதிமன்றத்தை நாடி வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்கக் கூட இல்லாத சூழ்நிலையில் இந்துக்கள் தவித்தனர்.

தற்போது கிறிஸ்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் சுமார் 65 ஏக்கர் – இரண்டாயிரம் கோடிக்கு மேற்பட்டது.

இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தற்போது வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் ஆசியுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் இந்துமுன்னணி…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.

இது சம்பந்தமாக உதவி செய்பவர்கள் கீழே இருக்கும் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

+919841305887

+919843354364

+919944238345

கிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்

இந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

ஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.

இந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட்டது…

செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.

தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..

தமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்

இதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..
திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.
தமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.
இருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
இதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.
தொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
கால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.
இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்

கோவிலைக் காக்க மத்திய அமைச்சரிடம் மனு- தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம்
#இந்து முன்னணி சாா்பாக குரும்பூா் இரயில்வே நிலையத்தின் அருகே உள்ள விநாயகா் கோவில் சம்பந்தமாக மத்திய இனையமைச்சா் மாண்புமிகு.#ஜெயந்த்சின்ஹா அவா்களிடம் மாவட்டபொறுப்பாளா்கள் மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பாக மனு கொடுக்கப்பட்டது