Tag Archives: போலி மதச்சார்பின்மை

வீரத்துறவி அறிக்கை- பதினெட்டாம் படியை அவமதித்தவர்களுக்கு  ஏப்ரல் 18 ஆம் தேதி பதிலடி கொடுப்போம்..

16-4-2019
பத்திரிகை அறிக்கை
ஜனநாயகத்தின் திருவிழாவான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 18ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு பெற்ற கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த 55 ஆண்டுகள் செய்த வளர்ச்சி நடவடிக்கைகளைக் காட்டிலும் அதிகமாக, கடந்த 5 ஆண்டு ஆட்சி செய்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து காட்டி சாதனை புரிந்துள்ளது. அனைத்து துறைகளிலும் மாபெரும் வெற்றியும், பெருமித உணர்வும் ஏற்பட வழிவகை செய்துள்ளதை ஒவ்வொரு இந்தியனும் உணர முடிகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் புதிய வரியோ, வரி விகிதம் கூட்டப்படவோ இல்லை, அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருக்க மத்திய அரசின் நடவடிக்கையே காரணம். அதேசமயம், தேசத்தின் வருமானம் பெருகியுள்ளது. இதிலிருந்து சிறந்த நிர்வாகம் எது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகத்தின் பலமே நமது வாக்குரிமை, இதனை
சுயலாபத்திற்காகவோ, பணத்திற்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருவரும், தமது வாக்குரிமையை செலுத்த வேண்டும். அது ஜனநாயகத்தின் புனித கடமையாக எண்ணி செயல்பட வேண்டும். நோட்டா -விற்கு வாக்களிக்கக்கூடாது. இது ஜனநாயகத்தை குலைத்துவிடும். காலையிலேயே வாக்குச்சாவடி சென்று வாக்குரிமையை செலுத்தி ஜனநாயகத்திற்கு வலு சேர்ப்போம்.
ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை பயன்படுத்தி, ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் நாத்திகவாதிகளையும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்களையும் போலீஸ் துணையோடு அழைத்து சென்று ஐயப்பனின் வழிபாட்டை சீர்குலைக்க இடதுசாரிகள் முயன்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் துணை நின்றன என்பதை இந்துக்கள் மறக்க வேண்டாம்.
மேலும், திராவிடர் கழக வீரமணி, இந்துக்களின் வழிபாட்டிற்குரிய கிருஷ்ணரை கேவலப்படுத்தி தேர்தல் பரப்புரையில் பேச மேடை அமைத்து கொடுத்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள். வருகின்ற 18ஆம் தேதி ஐயனின் 18ஆம் படியை அவமதித்தவர்களுக்கு தகுந்த பாடத்தை, வாக்கு எனும் ஆயுதத்தால் ஜனநாயக வழியில் பதிலடி கொடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்தியாவின் அனைத்து மக்களும் முன்னேற திட்டம் வகுத்து செயல்படுத்தியவரும், உலக நாடுகளில் இந்தியாவின் பெருமையை உணர செய்தவர் திரு. நரேந்திர மோடி. அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு உரிய சின்னத்தில் நமது வாக்கினைச் செலுத்துவோம். தேசத்தின் நலன் காத்திட, மீண்டும் மோடி பிரதமராகி நாட்டை வலிமையானதாக, வளமானதாக ஆக்கிட தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .

இந்து மதத்தை அவமதிக்கும் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்- திருச்சி சம்பவத்திற்கு கடும் கண்டனம், இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் .

திருச்சி மாநகரில் கீரைக்கடை பகுதியில் நேற்று திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸின் திருநாவுக்கரசரை ஆதரித்து திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர் .அந்த கூட்டத்தில் இந்துக்கள் போற்றி வணங்கும் தெய்வமான ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்து திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்புக்கரசு, ஆரோக்கியராஜ் ஆகியோர் கேவலமாக பேசி உள்ளனர் .

இந்த சம்பவம் அங்கு உள்ள இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது.
இதை தட்டிக்கேட்ட இந்துமுன்னணி ஊழியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் திராவிடர் கழகத்தின் குண்டர் படை.
பலத்த காயமடைந்த சிலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மீது பொய் வழக்கை பதியச் சொல்லி கட்டாயப் படுத்தி தற்போது 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .

இந்த சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு, பிணையில் எடுப்பதற்கு இந்து முன்னணி அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

தேர்தல் பிரச்சாரத்தில் எந்த மதத்தின் நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி பேசக்கூடாது, எந்த மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ள விதிகள்.

ஆனால் தொடர்ந்து திராவிடர் கழகத்தை சார்ந்த கி. வீரமணி மற்றும் அவரது கட்சியினர் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை மட்டுமே திட்டமிட்டு மிக மிக கேவலமாக பேசி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கிருஷ்ண பகவான்தான் காரணம் என்பதைப் போல சித்தரிக்கின்றனர்.

தகாத வயதில் திருமணம் செய்து கொண்ட பெரியார், 3 க்கும் மேற்பட்ட மனைவி, துணைவிகளை வைத்துள்ள பல திராவிட பாரம்பரிய அரசியல்வாதிகள் , தமிழகத்தில் நடக்கின்ற அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருக்கமுடியாதா?

இவர்கள் இஸ்லாமிய மதத்தையோ, கிறிஸ்தவ மதத்தையோ விமர்சிக்க முடியுமா?

இவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பேச அருகதை இருக்கிறதா??

திட்டமிட்ட முறையில் மத ரீதியான தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் திமுக கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை
தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க தவறி விட்டது .

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் நடத்தப்பெறும் இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் மாண்பை அமைதியை குறைக்கக்கூடிய செயல் .

இதுபோன்ற கேவலமான பிரச்சார யுத்தியை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திமுக கூட்டணியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

திமுக கூட்டணி கட்சியினரை எதிர்த்து தமிழகத்தில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்து முன்னணி அவர்களை தோற்கடிக்கும் .

இனிவரும் காலங்களில் இந்து மதத்தை, இந்து தெய்வங்களை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை சீர்குலைக்கும் யாரையும் இந்து முன்னணி சும்மா விடாது.

மக்களை ஒன்றுபடுத்தி மிகப்பெரிய ஹிந்து விழிப்புணர்வு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை மீறிய திருச்சி திமுக கூட்டணியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள இந்துமுன்னணி ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறது.

ஜாதி மோதலை, இந்துமத வெறுப்பை உருவாக்கும் அரசியலை திருமாவளவன் நிறுத்திக் கொள்ளவேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கமானது சமுதாயத்தில் ஜாதி துவேஷத்தை, இந்துமத வெறுப்பை உருவாக்குவதாக உள்ளது.
சனாதனம் என்ற வார்த்தைக்கு தொன்மையான என்ற அர்த்தம் உண்டு. ஆனால் அதை அடிப்படைவாதம் என்று கூறி , மாற்றத்தை விரும்பாத ஒரு தர்மம் என்றும் கருத்து சுதந்திரம் வழங்காத தர்மம் என்றும் கூறியுள்ளார். உண்மையில் விரும்பியவர்கள் விரும்பியதை பின்பற்றவும், கடவுளே இல்லை என்றுகூட கூறுவதற்கு சுதந்திரமும், இன்னும் சொல்லபோனால் யாரொருவர் எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிப்பதற்கான சர்வ சுதந்திரத்தையும் வழங்கியிருப்பது சனாதனம். ஒருபோதும் எதையும் வெறுத்தது இல்லை.
மூட நம்பிக்கைகளை பரப்புவது சனாதனம் என்று கூறுகிறார். ஆனால் சனாதன தர்மத்தில் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் பூர்வமானது என்று பல அறிஞர்கள் ஆய்ந்து கூறியுள்ளதை ஏற்க மறுக்கிறார். உதாரணமாக மாதவிடாய்க் காலங்களில், கர்ப காலங்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதை கடைபிடித்து பெண்களுக்கு சம உரிமை வழங்காத பழமைவாதம் கொண்டது சனாதனம் என்கிறார். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் , மன ரீதியிலான உளைச்சல்களுக்கு தக்க ஓய்வு தரப்படவேண்டும் என்பது மருத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள விஷயம், இன்றைய சூழலில் பெண்கள் தக்க பாதுகாப்புடன் அவற்றை சமாளித்து சமுதாயத்தின் அத்தனை துறைகளைளிலும் கோலோச்சுகிறார்கள். பெண்களை எப்போதும் மேன்மைப்படுத்தி சீராட்டி வருவது சனாதனம் தான். டெலிபோனிலோ, கடிதத்திலோ தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை பெண்களை வெறும் போகப் பொருளாக சித்தரிக்கும் நடைமுறை என்பதையோ, முத்தலாக் பிரச்சினையில் பெண்களுக்கு சமநீதி வழங்கப்படவில்லை என்பதையோ கூற திருமாவளவன் முன்வருவாரா?
அதே சமயம் மூடத்தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக செயல்பட்டு குருடன் பார்கிறான்,செவிடன் கேட்கிறான் , முடவன் நடக்கிறான் என்று பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு மதமாற்றத்தில் ஈடுபடும் வியாபாரிகளைப் பற்றி இவர் வாய் திறக்கவேயில்லை.
வர்ணாச்ரம தர்மத்தின் அடிப்படையில் வசிப்பிடங்கள் தனிதனி என்று பேதத்தை ஏற்படுத்தியுள்ளது சனாதனம் என்று பொய் பிரசாரத்தை கூறுகிறார். உண்மையில் இன்று நகரங்களின், பெரு நகரங்களின் நிலை என்ன? யாரும் யாருடைய ஜாதியையும் பற்றி கவலைப்படாது அப்பார்ட்மென்ட்களில் வசிக்கும் நிலை உள்ளது.
அதேபோல குலத்தொழிலை ஆதரிப்பது சனாதன தர்மம் என்கிறார். வேதம் தொகுத்த வியாசர் மீனவர் என்பதும், ராமாயணம் வழங்கிய வால்மீகி வேடர் குலம் என்பதையும், நாயன்மார்கள் ஆழ்வார்களில் உள்ள பல ஜாதியினரை பலரும் வணங்குகின்றனர் என்பதை சுலபமாக மறந்துவிட்டார்.
உண்மையில் நடிகன் மகன் நடிகனாவதும் , அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாவதும் தான் இன்றைய குலத் (குடும்பத்) தொழில் ஆக உள்ளது. அவர்களுடன் கூட்டணி பேசி அரசியல் ஆதாயம் தேடும் திருமாவளவன் சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் அருகதை அற்றவர்.
குழந்தை திருமணம், விதவை மறுமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை சனாதனம் பின்பற்றச் சொல்லும் நடைமுறை என்கிறார். ஆனால் அரசியல்வாதிகள் தங்களது தொண்டர்களை தீக்குளிக்கச் செய்யும் கொடூரம் தவிர இன்று இவைகளெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதும் சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இவைகளை கடைபிடிப்பதில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. உண்மையில் காலத்துக்கு தக்க மாற்றங்களை ஏற்று அதனை நடைமுறைப் படுத்தியுள்ளது சனாதன தர்மம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் சனாதனம் உறுதியாக உள்ளது.

திருமாவளவனின் இந்த பிதற்றல்களை உற்றுநோக்கும் பொது இவர் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. இதற்காக சிலரிடம் இவர் கைக்கூலி பெறுகிறாரோ என்று இந்துமுன்னணிக்கு சந்தேகிக்கிறது.
இவர் இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் வேண்டுமென்றே ஜாதி கலவரத்தை, மத வெறுப்பை உருவாக்கி குளிர் காய நினைக்கிறார் என்பது தெளிவு.
இந்துமதத்தில் ஜாதி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இறைவனின் அவதாரத்திலும், திருவிளையாடல்களிலும் இவை நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நமது ரிஷிகளும், முனிவர்களும், சாதுக்களும், துறவிகளும், சித்தர்களும் ஜாதி வேறுபாடுகளை களைவதிலே முன்னோடியாக இருந்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் பணத்திற்கும், பதவிக்கும், அரசியல் ஆதாயத்திற்காகவும் ஜாதி வேறுபாடுகளை தூண்டிவிட்டு ஜாதி அரசியல் செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் இத்தகைய ஆதாயம் தேடக்கூடியவராக இருப்பாரோ என் இந்துமுன்னணி கருதுகிறது.
ஆகவே இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டால், அவரோடு சேர்ந்து இந்துமத துவேசங்களை பரப்பி குளிர்காய நினைப்பவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அனைவரின் கபட வேடத்தை இந்துமுன்னணி பட்டி தொட்டி தோறும் கொண்டு சென்று இந்துக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்துமுன்னணி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.

தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..

தமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்

இதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..
திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.
தமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.
இருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.
இதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.
தொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
கால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.
இதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தேதிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்

தமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம்  உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
தொலைபேசி: 044-28457676
4-7-2018
பத்திரிகை அறிக்கை
உச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.
நேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.
ஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.
சிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.
உச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)