Tag Archives: #நிவாரணம்

முதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்
இந்து முன்னணி பேரியக்கத்துடன் இணைக்கப்பட்டது.
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 600 002. தொலைபேசி : 044 28457676, 9841769852

த. மனோகரன்
மாநில தலைவர்

மாண்புமிகு தமிழக முதல்வர்
உயர்திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,வணக்கம்.

பொருள்: ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க அனுமதி அளிப்பது வேண்டி.

தங்களின் தலைமையிலான தமிழக அரசும், மத்திய அரசும் கொரானா நோய் தொற்றின் பாதிப்பை குறைக்க பலவிதமான வழிமுறைகளை கையாண்டதின் விளைவாக, தமிழகத்திலும், பாரதத்திலும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அரசு, பலவிதமான நிவாரண உதவிகள் செய்து வந்தாலும், பல லட்சம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம், தொடரும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். தாங்கள் அளித்த நிவாரண உதவிகள் கிடைத்தாலும், ஆட்டோ பராமரிப்பு, அதற்குரிய தவணை தொகை மற்றும் குடும்ப செலவினங்கள் ஆகியன தொழிலாளர்களை பெரும் கவலை கொள்ள வைக்கிறது.

எனவே, ஆட்டோ இயங்குவதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறுகிறோம்.
நன்றி,

என்றும் தேசியப் பணியில்
த. மனோகரன்
மாநிலத் தலைவர்

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்