Tag Archives: #தப்லீக்மாநாடு

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி