Tag Archives: #டெல்லி

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கேள்வி??

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக பரவிவரும் சூழ்நிலையில் நேற்று (08/04/2020) நம் பாரத பிரதமர் அவர்கள் அனைத்து எதிர் கட்சி தலைவர்களுடனும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் திமுக கட்சி சார்பாக பங்கேற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் திரு T.R. பாலு அவர்கள் பங்கேற்றார்.

அப்போது பிரதமரிடம் அவர், சிலர் கொரோனா நோய் தொற்றை மதச்சாயம் பூசுவதாகவும் தாங்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இந்த கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்கிறது.

அதேசமயம் வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்குள் வந்த 11 நபர்கள்
[அவர்களின் பெயர் விபரங்கள்: ஏ. கம்ரன் இஸ்லாம்.(19),ஏ. தன்வீர் ரெய்ஹாகான் (26),எஸ் .மனீர்ஹாசன்(19),ஏ. சுலைமான்(36).,கே. அப்துல் ஹாலீக்(59)., ஹெச். கமால்பப்ரீ(32).,சோ. அப்துர் ரசாக்(62)., எஸ். மொக்தர் அலி(59).,
ஓ .ரபியுல் ஹாசி(26)., ஏ.சம்சுல்லாஹ்(66)., ஷபின் மத் மத்(43),]

டெல்லி தப்லிக் மத மாநாட்டில் கலந்துகொண்டு அதன் பின்னர் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அடியானூத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் அந்தப் பதினொரு பெயரையும் கைது செய்து விதியை மீறி மதப்பிரச்சாரம் செய்தல் கொரோனா வைரசை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதித்துறையின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்பேரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் திண்டுக்கல் வந்தனர்? வங்காளதேசத்தில் இருப்பவர்களுக்கும் திண்டுக்கல்லில் இருப்பவர்களுடன் என்ன தொடர்பு?? அந்தத் தொடர்பு உள்ள நபர்களை காவல்துறை கைது செய்ய வேண்டாமா?? தமிழக அரசு இந்த விசயத்தில் மென்மையான போக்கை கையாண்டு வந்தால் பல உயிர் பலிகள் ஏற்படும் அல்லவா??

மதச்சார்பின்மை மீது பெரும் அக்கறை உள்ள திமுக முன்னாள் அமைச்சர் திரு T.R. பாலு அவர்களுக்கு இந்திய நாட்டின் மீதும் தமிழகத்தின் மீதும் பெரிதும் அக்கறை இருந்தால் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே முன் வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்த பயப்படுவது ஏன்??

இஸ்லாமியர்கள் மீது பெரிதும் அக்கறையோடு அவர்கள் நடத்தும் அனைத்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளும் ஒரு கட்சி உங்களுடைய திமுக கட்சி, அவ்வாறு இருக்கையில் உங்களுடைய கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதனை உங்களால் வலியுறுத்தி பேச முடியுமா??

அவ்வாறு தங்களால் சொல்ல முடியவில்லை எனில் இதில் மதரீதியாக செயல்படுவது நீங்கள்தான் என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்வீர்களா?? அதை ஒத்துக் கொள்ளும் துணிச்சலாவது உங்களுக்கும் திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கிறதா??

என்றும் தாயக பணியில்

V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
2/131 பிள்ளையார் கோயில் தெரு,
பரமன்குறிச்சி,
தூத்துக்குடி.
9486482380