Tag Archives: #எச்சில்துப்பி

கொரோனா பரவக் காரணமானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து – மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்- திமுக தீர்மானத்திற்கு இந்துமுன்னணி பதில்

17.04.2020

சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி

பத்திரிகை செய்தி

கொரானா நோய்த்தொற்றை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அரசுடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் தன்னலம் கருதாது சேவை புரிந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சில கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தலைவர் திரு.மு .க .ஸ்டாலின் காணொளி கூட்டம் நடத்தியதுடன், கொரானா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது வாக்கு வங்கி அரசியலாகும்.

திமுக கூட்டணி கட்சிகள் கொரானா தொற்றுநோய் துவங்கிய ஆரம்ப முதலே பொதுமக்களின் நலனை கருதாமல் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும், அறிக்கை விடுவதுமாக இருந்து வருகிறார்கள்.

அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் ஈன செயல்களில் ஈடுபடுபவர்கள்
மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தாதது ஏன்?

இவர்களின் பொறுப்பற்ற செய்கையினால் பாதிப்புக்குள்ளாகும் டாக்டர்கள், காவலர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்கள் பற்றி சிந்திக்காமல் பிணத்தின் மீது அரசியல் செய்யும் திமுக வின் கேவலமான சிந்தனையை இந்துமுன்னணி வன்மையாக கன்டிக்கிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த – அரசு விதிகளை மீறி கூட்டங்களை கூட்டி நோய்த்தொற்றை ஏற்படுத்த காரணமானவர்கள், டாக்டர்கள் மீது எச்சில் துப்பியவர்கள்,
செவியர்களை அவமதித்தவர்கள், அம்மணமாக ஆடியவர்கள்,
வீட்டு சாப்பாட்டு கேட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தராதவர்கள், சட்ட விரோதமாக வெளிநாட்டுக் காரர்களை அழைத்து வந்து மதப்பிரச்சாரம் செய்தவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு வழங்கவேண்டுமென இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் சனில்குமார் மாநிலச் செயலாளர் இந்துமுன்னணி