Tag Archives: #முஸ்லிம் #பயங்கரவாதம்

புல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.
பாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.
பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.
நேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
மத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.
நாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.
மேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
15-2-2019
பத்திரிகை அறிக்கை
தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது!
காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .
இந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து மே 12 ல் – மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பத்திரிக்கை அறிக்கை..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மி நாயக்கன்பட்டியில் அப்பாவி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த ஊரில் சுமார் 1200 முஸ்லீம் குடும்பங்களும் 400 இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த இந்து குடும்பங்களை மதம்மாறுமாறு முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர் மதம்மாற மறுத்த காரணத்தாலும் இவர்களது அராஜகத்தை எதிர்த்த காரணத்தாலும் இந்துக்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொம்மிநாயக்கன் பட்டி என்று நெடுங்காலமாக இருந்து வந்த ஊரின் பெயரை துலுக்கன் பட்டி என்று மாற்ற முஸ்லீம்கள் முயற்சித்து வருகின்றன்.

அரசு பள்ளி கூடத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் அதை அல்அமீன் இஸ்லாமிய மண்டபம் என பெயரிட்டு சட்டத்துக்கு புறம்பாக தங்கள் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வந்து விட்டனர்.

பெரியகுளம் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்ட முஸ்லீம்கள் ஈத்கா மைதானம் என பெயரிட்டு அங்கே தொழுகை நடத்தி வருவதோடு போலி ஆவணங்களை தயாரித்து கோயில் நிலத்தில் மசூதி கட்ட முயற்சித்து வருகின்றனர்.

பஞ்சாயத்து பொது தண்ணீரை மசூதிக்கும் தங்கள் தோட்டத்துக்கும் குழாய் மூலம் சட்ட விரோதமாக எடுத்து வருகின்றனர்.

இதை எல்லாம் எதிர்த்த இந்துக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஆதாரம் பெற்று அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு அதிகாரிகளின் இந்த செயலை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்த மோசடிகளுக்கு துணை போன அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொள்கிறோம்..

மேலும் முறையாக விசாரித்து மேற்குறிப்பிட்ட விசயங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலித் மக்களின்
சவஊர்வலம் எப்போதும் செல்லும் பாதையில் சென்ற போது அதை தடுத்த முஸ்லீம்கள், சரமாரியாக கற்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர்.

காவல் துறையில் இந்துக்களின் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது ஆனால் இரண்டு தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடிவாங்கியவன் மீது வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம் என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

சவஊர்வலத்தில் தாக்குதல் நடத்திய யாரையும் காவல் துறை செய்யவில்லை. காவல்துறையின் இந்த கையாளாகாத போக்கால் ஊக்கம் பெற்றவர்கள் கோவில் திருவிழாவில் புகுந்து பிளக்ஸ் பேனர்களை கிழித்து தகறாறு செய்துள்ளனர். அப்போதும் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.

சில காவல்துறை அதிகாரிகளே பயங்கரவாதிகளோடு சேர்ந்து கொண்டு கலவரத்தை நடத்தியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

காவல்துறை இஸ்லாமிய அடைப்படை வாதிகளின் வன்முறையை வேடிக்கை பார்த்ததின் விளைவாக கடந்த 5.5.18 அன்று காலை நன்கு திட்டமிட்டு வெளியூரிலிருந்து பயங்கரவாத அமைப்புகளின் ஆட்கள் சுமார் 1000 பேரை அழைத்து வந்து இந்துக்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் உருட்டை கட்டை அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளனர். வீடுகள் கடைகள் வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் நபர்கள் இருப்பதாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் தெரிகிறது.

இதை படம் பிடித்து போட்டோ வீடியோ என ஆதாரத்தோடு புகார் கொடுத்த போதும் வன்முறையாளர்களை கைது செய்யாமல் புகார் கொடுத்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

இத்தனை அராஜகங்கள் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும்
சிறு பிரச்சனைக்கு எல்லாம் கூக்கிரலிடும் அரசியல் கட்சிகள் தலித் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை..?

தலித்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்லும் திருமாவளவன் எங்கே போனார்..? சமூகநீதி பேசும் ஸ்டாலின், வைகோ, சீமான் கம்யூனிஸ்டுகள் என இவர்களில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட தலித்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?

அடித்தவர்கள் முஸ்லீம்கள் அடிவாங்கியவர்கள் இந்துக்கள் என்பதாலா..? அப்படி என்றால் முஸ்லீம்கள் தலித்களை அடித்தால் இவர்கள் வரமாட்டார்களா? இவர்கள் எப்படி தலித் தலைவர்களாக இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்

இவர்களது போலி தலித் அரசியல் தற்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமாவளவன் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் கைகூலி என்பது தற்போதும் அம்பலமாகியுள்ளது. திருமாவளவனின் போலி தலித் முகமூடி இதன் மூலம் கிழிந்து போகியுள்ளது.

தலித்களுக்கு துரோகம் செய்துவரும் இந்த அரசியல் கட்சி தலைவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இவர்களின் ஜாதி அரசியலை புறக்கணித்து இந்துக்கள் அனைவரும் ஒற்றுமைபட வேண்டும் என மக்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தலித் மக்களை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், தலித்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும், உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பயங்கரவாத அமைப்புகளின் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி வரும் 12.5.18 சனிக்கிழமை இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.