Tag Archives: #காடேஸ்வரா_சுப்பிரமணியம்

ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

05.05.2020
மாண்புமிகு முதல்வர் அவர்கள்., தமிழக அரசு – சென்னை.அன்புடையீர் வணக்கம்,பொருள் : ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர். அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.நலவாரியங்களில் பதிவுசெய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சிறு உதவிகளை செய்து வந்தாலும், உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.இதில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் சென்றடையவில்லை.ஆகவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எத்தகைய உதவிகளை தமிழக அரசு செய்ததோ, அதே போல பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நல உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.இந்த நேரத்தில் பல தொழில்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் இதே நிலை நீடித்தால் பசியின் கொடுமையால் பல இழப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்பு உள்ளது.இதனை தாங்கள் கருத்தில் கொண்டு நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.என்றும் தாயக பணியில்காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்இணைப்பு :
1. மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
2. உயர்திரு ஆணையாளர் அவர்கள் – தொழிலாளர் நலத்துறை
3. உயர்திரு. இயக்குனர் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியம்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம்

04.05.2020
பத்திரிக்கை அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பொது மக்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தைரியமாக போரிட்டு, பொதுமக்களை காப்பாற்றும் பணியில் நான்கு இராணுவ வீரர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைத்த அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எதனுடனும் ஒப்பிடமுடியாது.

இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று பிணைக் கைதிகளாக இருந்த பொது மக்கள் அனைவரையும் இந்த ஐந்து தியாகிகளும் மீட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலியை இந்து முன்னணி பேரியக்கம் சமர்பிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கும் மத்திய அரசிற்கும் இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில் காடேஸ்வராசுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை

30.04.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தற்போது கொரோனா
காரணமாக144
லாக்டவுன்
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்சிறையில்
சிறைவாசிகளை
சந்திக்கும்
நேர்காணல் மற்றும்
வழக்கறிஞர்கள்
நேர்காணல் தடை
செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை காணமுடியாத
சூழ்நிலையில் சிறைவாசிகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது
இயல்பு.

இத்தகைய நேரத்தில்
சிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின்
கடமை.

அதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்
சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி
கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில்
இந்து சிறைவாசிகளை
கொடுமைப்படுத்துவதும்
தனிமைச்சிறையில்
அடைப்பதும் வாடிக்கையாக
இருந்தது.

சிறைத்துறை அதிகாரிகளிடம்
இந்துமுன்னணி பேச்சுவார்த்தை
நடத்தி இந்து கைதிகளுக்கு
பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை
முஸ்லீம் சிறைவாசிகளுக்கு
செய்து தந்த செளகரியங்கள்
ஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்
ரம்ஜான் காலங்களில்
பிரியாணி செய்ய அனுமதிப்பது என
தாராளம் காட்டியது.

இந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்கு
தடைவிதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .
காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி
பண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .

மேலும் கைது செய்யப்பட்டு
சிறைக்கு செல்லும் சிறைவாசிகளை
சோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்
கான்விக்ட் வார்டன்கள்
கடுமையாக தாக்குவது
என பல்வேறு கொடுமைகளை
அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம் .

சென்ற மாதம் கோவையில்
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்
RSS நிர்வாகி சூரிஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம்
சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க
சலுகை வழங்குகிறது
சிறைத்துறை .

அதே சமயம் கடந்தமாதம்
கைது செய்யப்பட்டு
குண்டர்சட்டத்தில்
அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை
தனிமை சிறையில்
அடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.

எனவே கோவை மத்திய
சிறையில் நடைபெறும்
மதரீதியான
பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும்,சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக
விரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து
கொள்கிறோம்.

சிறைத்துறை வார்டன் பூபால்
அவர்கள் முஸ்லீம்களால்
தாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து
சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம் இந்துமுன்னணி.
இதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி
கேட்டுக் கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ! பாலிமர் தொலைக்காட்சி மிரட்டும் மத அடிப்படைவாத கும்பலை கைது செய்க – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

23.04.2020

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பாலிமர் செய்தி சேனல்.
எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நடுநிலையோடும், நேர்மையாகவும் செய்திகளை பாலிமர் செய்தி தொலைக்காட்சி அளித்து வருகிறது.
இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் செய்தி தொலைக்காட்சியாக பாலிமர் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரானா தொற்று மிக அதிக அளவில் பரவுவதற்கு தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக இருந்ததையும்,மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்ததையும், தேவையான காலகட்டத்தில் மிகவும் தேவையான விழிப்புணர்வு செய்தியை பாலிமர் தொலைக்காட்சி உடனுக்குடன் கொடுத்து வந்தது.

எதையும் மதரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து பழகிப்போன தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் எப்படியாவது பாலிமர் தொலைக்காட்சியை தொலைத்து கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நிர்வாகத்தை மிரட்ட துவங்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் இன்னொசெண்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்தையும், விஸ்வரூபம் போன்ற திரைப்படைத்தையும் எதிர்த்து எதுபோன்ற மிரட்டல்களை விடுத்தார்களோ அதே பாணியில் தற்போது அதன் தலைமை செய்தியாளர் வேல்ராஜ், மற்றும் அவர் சார்ந்த பாலிமர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

உண்மை செய்தியை வெளியிட்டதற்காக ஒரு செய்தி தொலைக்காட்சியை குறிவைத்து மதவெறி கும்பல் நடத்தும் இந்தத் தாக்குதலை எந்த அரசியல் கட்சியும் கண்டிக்க முன்வராதது அவர்களின் தரம் தாழ்ந்த ஓட்டு அரசியலை காட்டுகிறது.

எதற்கெடுத்தாலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசும் இடதுசாரி அமைப்பினர் கருத்து சுதந்திரத்திற்கு சவால் விடும் பாசிச சக்திகளை கண்டிக்க முன் வராதது ஏன்? என இந்து முன்னணி கேள்வி எழுப்புகிறது.

குறிப்பிட்ட மதத்தினர் தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அரசியல் கட்சிகள் செயல்படுவது நியாயம்தானா?

ஊடகத் துறையைச் சார்ந்த சங்கங்கள் மூத்த ஊடகவியலாளர்கள் பாலிமர் தொலைக்காட்சியின் மீதான தாக்குதல்களை கண்டிக்காமல் இருந்தால் ஊடகத்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக மக்கள் நினைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அனைத்து பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக சங்கங்கள் பாலிமர் செய்தி சேனல் மீது தொடுக்கப்பட்ட இருக்கின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முன்வர வேண்டும்.

மிரட்டல் விடுத்த அந்தக் கும்பலின் மீது அந்த செய்தி தொலைக்காட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து மதவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தமிழக அரசு பாலிமர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மிரட்டலுக்கு உள்ளான தலைமை செய்தியாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இந்து முன்னணியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கோரிக்கை

15.04.2020

பத்திரிகையில் அறிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அரசாங்கமே கூழ் காய்ச்சுவதற்கு உண்டான அரிசி மற்றும் தானியங்களை
இலவசமாகக் கொடுத்தது உதவ வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கின்றது.

கடந்த காலங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் வந்த போது” குறிப்பாக பிளேக் நோய் வந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு வேண்டுதல்களை வைத்து ப்ளேக் என்ற பெயரிலேயே பல பிளேக் மாரியம்மன் கோவில்கள் நிறுவப்பட்டு
அவற்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பது கடந்த கால வரலாறு. இது இந்துக்களுடைய நம்பிக்கை.

ஆகவே தமிழக அரசாங்கம் தற்போது இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும்
நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதுடன் அதற்குண்டான தானியங்கள்” அரிசி போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்”

மேலும் கூழ் வினியோகிக்க ஏதுவாக அரசாங்கமே தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அல்லது தன்னார்வலர்கள் கையில் அதை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”
உடனடியாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று இந்துக்களும் மற்றும் இந்துமுன்னணி இயக்கமும் ஆவலோடு
எதிர்பார்க்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

13.04.2020

சோதனை ஒழியட்டும் – நாடு செழிக்கட்டும் – நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

நாடு கொரானா எனும் கொடும் நோயின் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழ்நிலையில் இனி பிறக்கின்ற ஸ்ரீ சார்வரி ஆண்டு இந்த நோயினை அழித்து மக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கின்ற ஆண்டாக இருக்க வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

பொருளாதாரப் பிரச்சனையிலிருந்து மக்கள் அனைவரும் மீண்டு, சகல விதமான செல்வங்களையும் இந்த ஆண்டில் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.

நம்முடைய பண்பாட்டு ரீதியிலான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை அனைவரும் கடைபிடிக்க இந்த ஆண்டில் சபதமேற்போம்.

நமது வாழ்க்கை முறை மற்றும் நமது பழைய உணவு பழக்கவழக்கங்கள் நம்மையும் நம் சந்ததியினரையும் இது போன்ற கொடிய நோய்களிடமிருந்து காப்பாற்றும்.

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். பிறக்கின்ற புத்தாண்டு அனைத்து விதமான சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுகின்ற ஆண்டாக அமையட்டும்.

அனைவருக்கும் சித்திரை 1 சர்வாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” -மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையையும், அரசு பணியாளர்களையும் தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
-மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த கொடிய தொற்று நோய் அனைவருக்கும் பரவி விடாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை
முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நோய் தொற்றிலிருந்து நம் மக்களை காப்பதற்காக நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பவர்கள், காவல்துறையினர்,
வருவாய்த்துறையினர் என்று பல துறையைச் சார்ந்தவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில்
நோய்த்தொற்று பரவாமல் இருக்க நம் அனைவரின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு மிகவும் அவசியம்.

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு தமிழகத்தின் சில பகுதிகளிலும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பல பகுதிகளில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை என்ற பெயரிலே கூட்டமாக கூடும் அராஜக போக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

ஏற்கனவே இஸ்லாமியர்கள் அரசினுடைய அறிவுரையையும், நிபந்தனைகளையும், உத்தரவுகளையும் பின்பற்றாமல் டெல்லியில்
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை நடத்தியதன் விளைவுதான் இன்று நாடு முழுக்க வைரஸ் தொற்று நோய் பரவி இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்
இவர்கள் கூட்டமாக கூடுவது நமக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் அவ்வாறு ஒன்று சேர்ந்தவர்களை கலைந்து போக அமைதியான முறையில் அறிவுறுத்தியும் கேட்காமல் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்
இதை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

அரசாங்கம் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் துறையைச் சார்ந்த நண்பர்கள் விரைவில் குணமடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அரசு சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை புறந்தள்ளி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது
நன்றி வணக்கம்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா

சுப்பிரமணியம்

மாநிலத் தலைவர்

ஒன்றியத்துக்கு 50 பேர்- கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார் மாநிலத் தலைவர் காடேஸ்வரா

கொரோனா பேரிடர் சேவைப் பணிகளுக்கு இந்துமுன்னணி தயார்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசும், தமிழக அரசும் மிகச் சிறப்பாக போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .

பாரதப் பிரதமர், தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்துமுன்னணி மனதார பாராட்டுகிறது.

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மக்கள் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள். அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.

எனவே இதைத் தடுப்பது மிக மிக அவசியமாகிறது.
தனிமைப் படுத்திக் கொள்ளுதல் என்ற உத்தரவை கடை பிடிக்க வேண்டியது மிக அவசியமாக உள்ளதால், நாமாக எதையாவது செய்து அது மேலும் சிக்கலை உண்டாக்கக் கூடாது என்பதை இந்துமுன்னணி இயக்கம் கவனத்தில் கொண்டுள்ளது.

அதே சமயம் அரசே இத்தகைய சூழலில் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஆகவே மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையிலும், இதற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும் , மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அரசின் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.

தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அரசின் அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது .
எங்களது சேவையை அரசு பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என ஊடகங்களின் வாயிலாக இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தமிழக மக்கள் பாரம்பரிய நடைமுறைகளை கடைபிடிப்பதில் எப்போதும் முன்னோடியானவர்கள். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அந்த நடைமுறைகள் மிகக் கட்டாயமாக கடைபிடிப்பது நல்லது.

சாணம் , மஞ்சள் நீர், வேப்பிலை கொண்டு வாசல் தெளித்து கோலம் போட்டு அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வேப்ப எண்ணெய் தீபத்தை வீட்டு வாசலிலும் , வீட்டினுள்ளும் ஏற்றி நமது வீட்டை , சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவை மிகுந்த பலனைத் தரும் என்று ஆன்மீகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்ரீ ராமநவமி வருகிறது. ஆகவே ஸ்ரீ ராமநவமி துவங்கி தினந்தோறும் வீடுகளில் இவைகளைக் கடைபிடிப்பதோடு, அன்றிலிருந்து தினசரி மாலை ஆறு மணிக்கு குடும்பத்தோடு சேர்ந்து அமர்ந்து 21 தடவை ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெயராமா மந்திரத்தை சொல்லவேண்டும் .
லட்சக்கணக்கானோர் இந்த நாம ஜெபம் சொல்லும் போது, கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களுக்கும் , அரசுக்கும் , சேவைப் பணியாற்றிடும் அனைவருக்கும் மிகப் பெரிய ஆன்ம பலத்தை, நம்பிக்கையை தரும். ராம நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம், ஆகவே மக்கள் அனைவரும் இந்த ராம நாம ஜெபத்தை செய்திட வேண்டும் எனவும் ஊடகங்களின் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

தாயகப் பணியில்காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

கொரோனா பேரிடர் நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

28.03.2020

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
பெறுனர் :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம் சென்னை
பொருள்: கொரோனா வைரஸ் பேரிடர் நிவாரணப் பணிகள் – தன்னார்வலர்கலாக பணியாற்ற அனுமதி
அன்புடையீர் வணக்கம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தங்களது அரசு மிகச் சிறப்பான வகையில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது .
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள இந்த முக்கிய காலகட்டத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைக்க பலதரப்பட்ட முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும் பல சமயங்களில் பால், காய்கறி , மளிகை, மருந்துகள் போன்ற பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியே வந்தாலும் அதுவே பல சமயங்களில் பெரிய கூட்டமாக மாறுகிறது.
எனவே இதைக் கருத்தில் வைத்து அந்தந்த பகுதிகளில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்தகைய சேவைப் பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்திட இந்துமுன்னணி பேரியக்கம் தயாராக உள்ளது.
தேசத்தின் நலன் காக்க, மக்கள் நலன் காக்க அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து சேவைகள் புரிய அனுமதி வழங்கிட வேண்டுகிறோம்.
நன்றி
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்- மதம் பிரச்சாரம் மூலமாக கொரோனா- சந்தேகம் எழுகிறது…

அனுப்புநர்:

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
அன்புடையீர் வணக்கம்..
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடங்கிய மதப் பிரச்சார குழுக்கள் தங்கி இருந்ததும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் மூலம் பலருக்கும் கொரோனா பரவி இருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மதப்பிரச்சாரம் செய்ய இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சார்ந்த மௌல்விகள் பதுங்கி இருந்ததை அந்த ஊர் மக்களின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பல மசூதிகளில் கூட்டமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த அனுமதியில் இந்தியாவிற்குள் வந்தார்கள்? சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து மத பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இத்தனை நபர்கள் வந்திருப்பதும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியிருப்தும் பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது.
“பயோ ஜிகாத்” என்ற பெயரில் திட்டமிட்டு கொரானா வைரசை பரப்பியதாக மக்கள் பேசி வருகின்றனர். இது பற்றியும் அரசு விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை சோதனை செய்து கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் இருந்தால் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்