Daily Archives: March 2, 2020

ஹயக்ரீவர் பூஜை- தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை – இந்து அன்னையர் முன்னணி சாதனை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பெண்களின் அணியான இந்து அன்னையர் முன்னணி தமிழகத்தில் மிக சிறப்பான வகையில், ஆன்மீகத்தின் மூலம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

தற்சமயம் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயம் நீங்க வேண்டும், மனவலிமை ஏற்பட வேண்டும், தன்னம்பிக்கை உருவாக வேண்டும், எதையும் சந்திக்கின்ற ஆற்றல் பெருகவேண்டும் என்பதற்காக ஹயக்ரீவர் பூஜை அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களில் நடத்தி வருகிறது .

சமீபகாலமாக தேர்வில் தோல்வியுற்றால் விபரீத முடிவை எடுக்கின்ற மாணவர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ஹயக்ரீவர் பூஜை மாணவர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களுக்கு ( பள்ளியில், கிராமங்களில்) மேல் அன்னையர் முன்னணி பெண்கள் ஹயக்ரீவர் பூஜை நடத்தியுள்ளனர் .

வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று இன்று அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி என்பது நம்முடைய தர்மத்தில் வழிபாடோடு சேர்ந்தது என்பதை இந்த பூஜைகள் நிரூபிக்கின்றன.

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்