Daily Archives: March 1, 2020

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள் – இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள்…

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் எனக் கூறிக்கொண்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி இந்து கடவுள்களை மிக கேவலமாகவும், இழிவுபடுத்தி பேசியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து வருகிறார்கள். மேலும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அப்பகுதி வாழ் மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதி கிராம மக்கள் – மங்கலம், கணியம்பூண்டி இடுவாய், புத்தூர் வேலாயுதம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென இன்று மாலை நாலு மணிக்கு மலைக்கோவிலில் கூடி மேற்படி சட்ட விரோத அராஜக போக்கை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மங்கலம் காவல் நிலையத்திற்கு சுமார் 300 பேர் சென்று புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து “இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு “ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்மூலம் மங்கலத்தில் நடைபெறும் அனைத்து சட்ட விரோத தேசத்துரோக நடவடிக்கைகளையும் கண்டித்து மக்களைத் திரட்டி போராட உள்ளதாக உள்ளனர்.

இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு.