Daily Archives: September 27, 2017

வீடுகள் பலம் பெற சக்தி பூஜை கொண்டாடுவோம்

தர்மத்தை காக்க, அதர்மம் அகற்ற அன்னை ஆதிபராசக்தி தனது ஒன்பது அம்சங்களை வெளிப்படுத்தி அகிலத்தை காத்து ரட்சித்தாள். அதையே நவராத்திரி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.

ஒன்பதாவது நாள் ஆயுதங்களை எல்லாம் பூஜித்து அன்னை வழிபட்ட தினத்தை ஆயுதபூஜை என்று கொண்டாடுகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் வீடுகள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் என விசேஷமாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் படைத் தொழிலும், விவசாயமும் முக்கியமானதாக இருந்தது.

எனவே வீட்டுக்கொரு உழவனும், மறவனும் இருந்தான். அவர்களது ஆயுதங்களை இந்த ஒன்பதாம் நாள் பூஜையில் வைத்து வணங்குவது வழக்கமாயிருந்தது.

ஆபத்து வந்தால் எதிர்த்துப் போரிடும் வல்லமையும், ஆயுதங்களும் அவர்களிடம் இருந்தது.

பிற்காலத்தில் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றதால் ஆயுதபூஜையின் தன்மையும் மாறியது.

தற்போது கால்குலேட்டரையும், மௌஸையும் வைத்துக்கூட பூஜை செய்கிறார்கள்.

ஆனால் வீடுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா?…

வீட்டை ஒரு கொள்ளையனோ, எதிரியோ தாக்கும் பட்சத்தில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளக் கூடிய பலம் பொருந்திய வீடுகளாக, நமது வீடுகள் இருக்க வேண்டாமா?

ஒரு பாம்போ, விஷ ஜந்துவோ வந்தால்கூட அலறியடித்து ஓடும் சூழல் நமது வீடுகளில் உருவாகி வருகிறது.

எனவே இந்துக்களின் வீடுகள் பலம் மிக்கதாக, எத்தகைய ஆபத்துக்களையும், தாக்குதல்களையும் எதிர்த்து முறியடிக்கும் வல்லமை உள்ளதாக மாற வேண்டும்.

எனவே ஆயுத பூஜை அன்று நமது வீடுகளில் தொழில் சம்பந்தமான ஆயுதங்களுடன், நம்மை தற்காத்துக் கொள்ள தேவையான சில ஆயுதங்களையும் வைத்து வழிபடுவோம்.