உலக சமாதான தெய்வீகப் பேரவை அறங்காவலர் உயர்திரு C.K முருகானந்தம் அவர்களுக்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் அறிக்கை

12.05.2020காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் – இந்துமுன்னணிகோவை அருண்சக்தி இன்ஜினியரிங் டெக்டைல்ஸ் நிறுவனத் தலைவரும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் உலக சமாதான தெய்வீகப் பேரவை அறங்காவலருமான உயர்திரு C.K முருகானந்தம் அவர்கள் (11.5.2020) திங்கட்கிழமை இரவு பதினோரு மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.காமாட்சிபுரி ஆதீனத்தை நிறுவி அதனுடைய ஆதீனகர்த்தாவாக, பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகள் செய்து கொண்டிருக்கிற போற்றுதலுக்குரிய சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடன் பிறந்த சகோதரர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.அவரை இழந்து வாடும் சுற்றத்தாருக்கும் காமாட்சிபுரி ஆதின பெருமக்களுக்கும், இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
(மாநிலத் தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *