ஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.

ஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திங்கள்கிழமை மாலை இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு. பா. ஜெகதீசன் அவர்களின் தலைமையில் ,மாவட்ட பொதுச்செயலாளர் திரு. ப. சக்தி முருகேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் -1

சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையாக தினமும் ஈரோட்டில்லிருந்து சென்னை செல்லும் அனைத்து இரயில்களிலும் குடிநீர் எடுத்து செல்லும் டேங்கர்கள் இணைத்து குடிநீர் எடுத்து சென்று சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும் என மாநில அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 2

ஈரோடு மாநகராட்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, நிலத்தடியில் மின்சாரம் எடுத்து செல்லும் கம்பி பதிக்கும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றன, இதில் ஏற்கனவே பணி நடைபெற்ற சாலையை முழுமையாக செப்பனிடாமல் மக்கள் பயன்படுத்தும் மீதி சாலைகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும் , பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே வளர்ச்சி பணியினை மக்களுக்கு இடையூர் இல்லாமல் மக்கள் செல்ல மாற்று வழித்தடத்தை ஏற்படுத்தி தந்து திட்டமிட்டு பணியினை விரைந்து முடிக்கும்மாரு மாநகராட்சியை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் – 3

ஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஜூலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக நான்கு இடங்களில் மிக சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, வக்கீல் முரளி, சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *