Tag Archives: தமிழக பாதுகாப்பு மாநாடு

சென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை

இராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு!தமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலைகள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)