Tag Archives: #சனாதனதர்மம்

இந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

23.10.2020

கடந்த 16.10.2020 அன்று பெரியார் tv என்ற யூ ட்யூப் சானலில் காணொளி வெளியானது . அதில் 26.09.2020 அன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு காணொளி மூலம் பெரியாரிய தேசவிரோத அமைப்புகள் மூலமாக நடைபெற்ற பெரியாரும் இந்திய அரசியலும் என்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. திருமாவளவன் இந்து மதத்தினுடைய மனுதர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று கூறப்பட்டுள்ளதாக பேசியுள்ளார்.

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கில் ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு கூறியுள்ளார். இந்த செயல் இந்துக்கள் மத்தியில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தொடர்ந்து இந்து தர்மத்தை, இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கின்றார். பிற மதங்களைப் பற்றி எவ்வித கருத்தையும், எப்போதும் இவர் சொன்னது கிடையாது. அப்படியெனில் இவர் யாரோ ஒரு சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இவ்வாறு பேசுகிறார் என்பது உறுதியாகிறது. இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

இதே போல ஒரு தொடர்ந்து பேசி வருவதை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கண்டிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுடன் யாரும் கூட்டணி வைக்க கூடாது. அப்படி கூட்டணி வைப்பவர்களுக்கு எதிராக இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் .

அதேபோல இவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது பதவிப்பிரமாணம் செய்து கொண்டபடி நடந்து கொள்ளவில்லை. இந்து மதத்தின் மீது மிகப் பெரும் வெறுப்பை காண்பிக்கிறார். அதனால் அரசியல் சாசனப்படி இவருடைய நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க இவருக்கு அருகதை இல்லை.எனவே இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேதகு ஜனாதிபதி அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்