Tag Archives: #கஞ்சி

தீபாவளி,பொங்கல் இனாம் வழங்குவது போல் ரம்ஜான் நோன்பு அரிசியை அனைவருக்கும் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துமுன்னணி மனு தாக்கல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450 மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக 2895 பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு 16.4.3020 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக இந்துமுன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சென்னை உயர்நிதிமன்றத்தில் தடை உத்திரவு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்…

தை பொங்கலுக்கு அரிசியும், வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும் எனவும்

மேலும் கொரோணோ ஊரடங்கு காலத்தில் மத வழிபாட்டு தலங்கள் மூலம் வழங்குவதால் கொரோணோ தொற்று மேலும் பரவலுக்கு வழி ஏற்படும்

அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. எனவே ரேசன் கடைகள் மூலம் அதனை அனைத்து மக்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்க வேண்டும்

எனவே 16.4.2020 ல் அரசு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல் பள்ளிவாசல் மூலம் முஸ்லீம்களுக்கு மட்டும் அரிசி வழங்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தொடுக்கப்பட்டுள்ளது

இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திரு T.அண்ணாமலை இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்

இம் மனு நாளை திங்கள் கிழமை விசாரனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – மாநில செயலாளர் குற்றாலநாதன்

16.04.2020

அனுப்புநர்
கா.குற்றாலநாதன்
திருநெல்வேலி

பெறுநர்

சென்னை

வணக்கம்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு 5450மெட்ரிக் அரிசி ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவற்காக பள்ளிவாசல்கள் மூலம் வழங்க உத்திரவிட்டுள்ளதாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 ) தை பொங்கலுக்கு அரிசியும் வெல்லமும் அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்படும் நிலையில் ரம்ஜான் அரிசியை மட்டும் குறிப்பிட்ட மதத்தினருக்கு வழங்குவது பாரபட்சமான ஒன்றாகும். மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது.

2. ) அரசாங்கத்தால் வினியோகிக்கப்படும் பொருட்களை வழங்க சிவில் சப்ளைஸ் பொது விநியோக திட்டம் (PDS ) உள்ளது. தற்போதுள்ள கொரோனா தடை காலத்திலும் அந்த PDSஅமைப்பு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

பொது விநியோக திட்டத்தில் தமிழகம் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்து வருகிறது. அவ்வாறு இருக்கும்போது அரசு வழங்கும் அரிசியை பள்ளிவாசலில் வழங்குவது சரியா ? தமிழகத்தில் கொரோணா பரவலுக்கு பெருமளவு காரணம் என்ன என்பதை அறிந்த அரசே மீண்டும் சமூக பரவலுக்கு வழிவகுக்கலாமா ?

3) ஊரடங்கு உத்தரவினால் கோவில்கள், சர்ச்சுகள் எல்லாம் கடந்த 21 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அரிசி வழங்குவதற்காக பள்ளிவாசலை மட்டும் திறக்க சொல்வது நியாயமா?

தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம், புனித வெள்ளி, ஈஸ்டர் என எந்த பண்டிகைக்கும் எந்த வழிபாட்டு தலத்திலும் எந்த மக்களும் அனுமதிக்கபடாத நிலையில் பள்ளிவாசலில் அரிசி வாங்க மட்டும்திறக்கலாமா ? பொதுமக்களை அனுமதிக்கலாமா ? இது பாரபட்சமான நடவடிக்கை என பொதுமக்கள் கருதுகிறார்கள்

4 ) கோவில்களையும் சர்ச்சைகளையும் திறந்தால் மட்டும் நோய் தொற்று பரவும் . ரம்ஜான் அரிசி கொடுக்க பள்ளிவாசலை திறந்து கூட்டம் சேர்த்தால் நோய் பெற்று பரவாதா?

ஆகவே ரமலான் நோன்பு அரிசியை வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்களை திரட்டி அரிசி வழங்கி கொரோணா தொற்று பரவலுக்கு அரசே வழிவகுக்காமல் தீபாவளி, பொங்கல் இனாம் போல அனைத்து மக்களுக்கும் மதசார்பற்ற அரசு மத பாகுபாடின்றி பொது விநியோக திட்டம் மூலம் ரேசன் கடைகளில் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

கா.குற்றாலநாதன்

மாநில செயலாளர்

இந்துமுன்னணி
நெல்லை