Tag Archives: ஆலயம் காக்க

பெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
பின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.

கொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.

ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.

செட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

இதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்

நேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.

இந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,

இந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா ? என்று பல கருத்துக்களை கூறினர் )

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்

இந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.

கொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.

சசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்

17-11-2018
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி!
எல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.
கிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.
பல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
கேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

சிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

2-8-2018

பத்திரிகை அறிக்கை

திரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.

விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

இதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.

இந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

துணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

வையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி

16.7.18

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.

இங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.

எட்டு ஆண்டுகள் முன்பு
தலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.
ஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.
அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக
பிரச்சினை இருந்து வருகிறது.
தலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .
ஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு
காவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.
இது தொடர்கதை ஆனது .

இந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.

இந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

கலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .
ஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.
இரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
தற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.