கைலாஷ் யாத்திரை உதவித்தொகை- கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா? மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கேள்வி

நா. முருகானந்தம் 03.03.2020
மாநில பொதுச் செயலாளர்

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையா?

கைலாஷ் , முக்திநாத் , மானசரோவர் போய் வந்தவர்களில் 500 பேர்களுக்கு ரூ10000/- உதவித்தொகை என இந்து அறநிலையத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான நயவஞ்சகம், ஏமாற்றும் செயல்.

இந்துமுன்னணி இதை வன்மையாக கண்டிக்கிறது.

மெக்கா, மதீனா செல்ல முஸ்லீம்களுக்கு அரசின் பணம்.

ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசின் பணம்.

இந்துக்களுக்கு மட்டும் இந்துக்கள் உண்டியலில் போடும் பணத்தை எடுத்து 500 பேருக்கு மட்டும் விநியோகமா?

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் கண்ணில் வெண்ணை , இந்துக்கள் கண்ணில் சுண்ணாம்பு! இதுதான் மதசார்பின்மையா?

இந்த பாரபட்சத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்களுக்கு வக்ப் வாரியப் பணத்திலிருந்தும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்களது நலவாரியத்திலிருந்தும் தான் கொடுக்கவேண்டும்.

மானியம் வழங்குவதிலும் அதுவும் வழிபாட்டிற்கு செல்ல பணம் கொடுப்பதில் கூட சிறுபான்மையினைரைத் தாஜா செய்யும் போக்கு மிக கேவலமான அரசியலாகத் தோன்றுகிறது.

இந்துக்கள் புனித யாத்திரை செல்வதற்கு மானியம் அரசின் பணத்திலிருந்துதான் தரவேண்டும் என இந்துமுன்னணி தமிழக அரசிற்கு கடுமையாக வலியுறுத்துகிறது.

தாயகப் பணியில்
நா. முருகானந்தம்

மாநில பொதுச் செயலாளர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஹயக்ரீவர் பூஜை- தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை – இந்து அன்னையர் முன்னணி சாதனை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் பெண்களின் அணியான இந்து அன்னையர் முன்னணி தமிழகத்தில் மிக சிறப்பான வகையில், ஆன்மீகத்தின் மூலம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது .

தற்சமயம் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் பயம் நீங்க வேண்டும், மனவலிமை ஏற்பட வேண்டும், தன்னம்பிக்கை உருவாக வேண்டும், எதையும் சந்திக்கின்ற ஆற்றல் பெருகவேண்டும் என்பதற்காக ஹயக்ரீவர் பூஜை அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களில் நடத்தி வருகிறது .

சமீபகாலமாக தேர்வில் தோல்வியுற்றால் விபரீத முடிவை எடுக்கின்ற மாணவர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த ஹயக்ரீவர் பூஜை மாணவர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்து வருகின்றது .

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் இடங்களுக்கு ( பள்ளியில், கிராமங்களில்) மேல் அன்னையர் முன்னணி பெண்கள் ஹயக்ரீவர் பூஜை நடத்தியுள்ளனர் .

வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என்று இன்று அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி என்பது நம்முடைய தர்மத்தில் வழிபாடோடு சேர்ந்தது என்பதை இந்த பூஜைகள் நிரூபிக்கின்றன.

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள் – இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு

வெகுண்டெழுந்த கிராம பொதுமக்கள்…

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில் குடியுரிமை எதிர்ப்பு போராட்டம் எனக் கூறிக்கொண்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி இந்து கடவுள்களை மிக கேவலமாகவும், இழிவுபடுத்தி பேசியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நடந்து வருகிறார்கள். மேலும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அப்பகுதி வாழ் மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

அப்பகுதி கிராம மக்கள் – மங்கலம், கணியம்பூண்டி இடுவாய், புத்தூர் வேலாயுதம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென இன்று மாலை நாலு மணிக்கு மலைக்கோவிலில் கூடி மேற்படி சட்ட விரோத அராஜக போக்கை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மங்கலம் காவல் நிலையத்திற்கு சுமார் 300 பேர் சென்று புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து “இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு “ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்மூலம் மங்கலத்தில் நடைபெறும் அனைத்து சட்ட விரோத தேசத்துரோக நடவடிக்கைகளையும் கண்டித்து மக்களைத் திரட்டி போராட உள்ளதாக உள்ளனர்.

இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு.

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி

29.02.2020

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது..

பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் காட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்துகொள்வதை காண்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப்பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களிடம் உள்ள

சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகப் பணியில்

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற கோரி போராட்டம் துவங்கியது- பல மாவட்டங்களில் போராட்டம் நடத்த திட்டம்-மாநிலத் தலைவர்

பங்ளாதேஷிகளை வெளியேற்ற
கோரி காலவரையற்ற போராட்டம் துவங்கியது.திருப்பூரில் இந்துமுன்னணியின் தலைமையில் இந்துக்களின்
போராட்டம் திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.சட்டவிரோதமாக பங்ளாதேஷ்
நாட்டை சேர்ந்த
முஸ்லிம்கள்
சுமார் 50 ஆயிரம் பேர் திருப்பூரில் ஊடுருவியுள்ளனர்.அவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் வரை இந்தப்
போராட்டம் காலவரையின்றி
தொடரும் எனவும் இதேபோல்
மேலும் பல மாவட்டங்களில்
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்துக்களே ஒன்று சேருவோம்..
இப்போது இல்லை என்றால்
எப்போதும் இல்லை.

அரசு மெத்தனம்- வழக்கின் ஆவணங்கள் காணவில்லை- தமிழக முதல்வருக்கு மாநில துணைத்தலைவர் கடிதம்

கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்செந்தூர் முருகனுக்கு சொந்தமான வைரவேல் உட்பட சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார் .

சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், தமிழக அரசின் உள்துறை செயலாளர் அறிக்கை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

தமிழக அரசு ஹிந்து ஆலயங்ககளின் விஷயத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது .

நேர்மையான போலீஸ் அதிகாரி பொன் . மாணிக்கவேல் அவர்களுக்கு பணி நீடிப்பு கொடுக்காமல் இருக்க காட்டப்பட்ட முக்கியத்துவம் தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க காட்டவில்லை என்று தோன்றுகிறது .

இந்த ஆவணங்கள் காணாமல் போனதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பார்கள் என்றும் மிகப்பெரும் மாஃபியா கும்பலின் சதி உள்ளதாகவும் இந்து முன்னணி கருதுகிறது .

ஆகவே தமிழக அரசும் மாண்புமிகு முதல்வர் அவர்களும் தக்க கவனம் கொடுத்து கோவில்களின் புராதான சிலைகளை , சொத்துக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தாயகப் பணியில்

வி.பி.ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்

இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சாதி கட்சிகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுபவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அரங்கேறி வரும் சூழலில்,நெல்லையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அரஜாகத்தின் உச்சமாக கடையை பூட்டு போட்டு வெளியூரில் இருந்து சில பயங்கரவாதிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளனர், இதில் கொடுமை என்னவென்றால் அந்த பகுதியில் வியாபாரம் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்சனை என்றால்தான் வரும் ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுக்க கட்சியாவது மண்ணாங்கட்டியாவது தன்மானமே முக்கியம் என கூறி அங்கு கடைவைத்திருந்த கடையின் உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என கட்சி பாராமல் இந்துக்கள் என்ற ஒற்றுமையுடன் இணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.இந்த சூழலில்தான் மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாதிகள் இன்றி சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டுருக்கிறார்கள்.இனி நெல்லையில் ஒற்றை இஸ்லாமிய கடைகளில் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும், எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.
மேலும் அங்கு இந்து அமைப்பு சார்பில் வணிகர் சங்கம் உருவாக்கப்படும் என்றும் இனி இந்துக்கள் கடைகளில் வியாபாரம் செய்வோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பாதிக்கப்படும் போது உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.