உலக சமாதான தெய்வீகப் பேரவை அறங்காவலர் உயர்திரு C.K முருகானந்தம் அவர்களுக்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் அறிக்கை

12.05.2020காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் – இந்துமுன்னணிகோவை அருண்சக்தி இன்ஜினியரிங் டெக்டைல்ஸ் நிறுவனத் தலைவரும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் உலக சமாதான தெய்வீகப் பேரவை அறங்காவலருமான உயர்திரு C.K முருகானந்தம் அவர்கள் (11.5.2020) திங்கட்கிழமை இரவு பதினோரு மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.காமாட்சிபுரி ஆதீனத்தை நிறுவி அதனுடைய ஆதீனகர்த்தாவாக, பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவிகள் செய்து கொண்டிருக்கிற போற்றுதலுக்குரிய சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடன் பிறந்த சகோதரர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.அவரை இழந்து வாடும் சுற்றத்தாருக்கும் காமாட்சிபுரி ஆதின பெருமக்களுக்கும், இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
(மாநிலத் தலைவர்)

இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்

மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்

வணக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.

மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.

மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக DGP அவர்கள்

தாயகப் பணியில்

V.P. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கு பாராட்டுக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கடிதம்

இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2. தொலைபேசி : 044 28457676,
காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

7.5.2020

உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,
முதன்மை செயலர் / ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை,
சென்னை 34.

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணுவது குறித்த தங்களின் சுற்றறிக்கை அறிந்து மகிழ்ந்தோம்.

தங்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கண்டு, இந்து முன்னணி தங்களை மனதார பாராட்டுகிறது.

நமது திருக்கோயில்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் நோய் தொற்று ஏற்பாடாத வண்ணமும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் அளித்துள்ள சுற்றறிக்கை குறிப்புகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

அதே சமயம் பணியாளர்கள் நலனிலும், அவர்கள் பாதுகாப்பிலும் தாங்கள் காட்டியுள்ள அக்கறை மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த நோய் தொற்றிலிருந்து, உலகமும், நமது நாடும், தமிழகமும் மீண்டு, நல்ல நிலைக்குத் திரும்பி அனைவரும் நலமுடன் வாழ்ந்திட இறைவன் திருவருள் புரிவாராக.

நன்றி.

என்றும் தேசியப் பணியில்,

(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்

மதுக்கடைகளை திறக்கும் முடிவு – கொரோனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் முயற்சி- தமிழக நலன் கருதி இதை உடனடியாக கைவிட இந்துமுன்னணி கோருகிறது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

05.05.2020
பத்திரிகை அறிக்கை
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

எதிர்வரும் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.

கொரோனா தாக்குதளில் வெகுவாக பீடித்துள்ள இந்த நிலையில் தமிழக அரசின் இந்தமுடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

இதனால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகி கொரோனா பரவுவது அதிகரிக்கும் என்பது உறுதி.

கொரோனாவுக்கு அரசே சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி மக்கள் அன்றாட உணவிற்கே பெருத்த சிரமங்களை சந்தித்து வருகின்ற நிலையில், மதுக் கடைகள் திறக்கப்பட்டால் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்றுக் குடிக்க மக்களை அரசே தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை, பணத்தை மதுக்கடைகள் மூலம் வசூல் செய்ய அரசு இந்த முயற்சியை மேற்கொள்கிறதோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

அரசு மதுக் கடைகளை திறக்க காண்பிக்கும் ஆர்வத்தை, பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவில் அன்னதான திட்டத்திற்கு காண்பித்தால், மீண்டும் துவக்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இந்துமுன்னணி எண்ணுகிறது.

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் இந்துமுன்னணி பேரியக்கம் கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

05.05.2020
மாண்புமிகு முதல்வர் அவர்கள்., தமிழக அரசு – சென்னை.அன்புடையீர் வணக்கம்,பொருள் : ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர். அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.நலவாரியங்களில் பதிவுசெய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சிறு உதவிகளை செய்து வந்தாலும், உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.இதில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் சென்றடையவில்லை.ஆகவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எத்தகைய உதவிகளை தமிழக அரசு செய்ததோ, அதே போல பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நல உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.இந்த நேரத்தில் பல தொழில்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் இதே நிலை நீடித்தால் பசியின் கொடுமையால் பல இழப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்பு உள்ளது.இதனை தாங்கள் கருத்தில் கொண்டு நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.என்றும் தாயக பணியில்காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்இணைப்பு :
1. மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
2. உயர்திரு ஆணையாளர் அவர்கள் – தொழிலாளர் நலத்துறை
3. உயர்திரு. இயக்குனர் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியம்

ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம்

04.05.2020
பத்திரிக்கை அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் பொது மக்களை பிணை கைதிகளாக பிடித்துவைத்து பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தைரியமாக போரிட்டு, பொதுமக்களை காப்பாற்றும் பணியில் நான்கு இராணுவ வீரர்களும் ஒரு காவல்துறை அதிகாரியும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஓய்வின்றி உழைத்த அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எதனுடனும் ஒப்பிடமுடியாது.

இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்று பிணைக் கைதிகளாக இருந்த பொது மக்கள் அனைவரையும் இந்த ஐந்து தியாகிகளும் மீட்டுள்ளனர்.

அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலியை இந்து முன்னணி பேரியக்கம் சமர்பிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று இராணுவத்திற்கும் மத்திய அரசிற்கும் இந்துமுன்னணி கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில் காடேஸ்வராசுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

02.05.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை..

தொழில் நகரமான திருப்பூர் தற்போது
கொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து வருகிறது. இது பச்சை மண்டலமாக மாறும் போதுதான் திருப்பூர் சகஜ நிலைக்கு திரும்பும்.

பச்சை மண்டலமாக மாற்றுகின்ற பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அரசுக்கும் காவல்துறைக்கும் ஒவ்வொரு குடிமகனும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரானா தொற்றை முற்றிலுமாக தடுக்க முடியும்.

கடந்த 40 நாட்களாக கோவில்கள் பூட்டப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலிலும் வழிபாடுகள் நடைபெறுவது இல்லை. மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கைவிடப்பட்டுள்ளது, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் கைவிடப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க திருப்பூர் பெரிய தோட்டம் கொரானா தொற்று அதிகம் இருக்கின்ற பகுதியாக இருப்பதால் அந்தப் பகுதி அரசு அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மத அடிப்படைவாதிகள் ஒன்று ஒன்று சேர்ந்து ரம்ஜான் நோன்பு இருக்கிறோம் எனவே கடைகளைத் திறக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி
கடை திறந்து கூட்டத்தை சேர்த்துள்ளனர், கடையை அடைக்க சொன்ன காவல்துறையை கண்டித்து 300 பேர் கூட்டமாய் சேர்ந்து இரண்டு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதேபோல் மங்கலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இந்த மத அடிப்படைவாத கும்பல் மறியல் செய்ததையும் அனைவரும் அறிந்ததே..

திருப்பூர் ஒரு மிகப்பெரிய பனியன் உற்பத்தி நகரம் இந்தத் தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ளனர். இதேபோல் தொழில் முனைவோர் பல கோடிக்கணக்கில் பனியன் தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நகரில் பனியன் உற்பத்தி தொடங்கினால்தான் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர்கள் உணவு உண்ண முடியும்.

இந்த நெருக்கடியான நிலையில் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

ஆனால் மத அடிப்படைவாத கும்பல் ஒன்று ஆங்காங்கே கூட்டங்களை சேர்த்து மதத்தின் பெயரால் கொரானா பரவும் வாய்ப்பை உருவாக்கி வருகிறது.

இந்துக்கள் வெளியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றால் உடனே வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்
முஸ்லீம்கள் குரானா பரப்பும் வகையில் ஒன்று கூடினால், அவர்கள் மீது பெயருக்கு வழக்குப்பதிவு செய்து அதோடு கிடப்பில் போட்டுவிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதனால் ஊக்கம் பெற்ற மதவெறி கும்பல் தினம்தோறும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகிறது. இதுபோன்ற போராட்டங்கள் நடத்திய எவரையும் காவல்துறை கைது செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற போராட்டங்களால் இத்தனை மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பது வீணாகப் போய்விடும் அரசின் அத்தனை நடவடிக்கைகளும் வீணாகப் போய்விடும் இதை அரசும் காவல்துறையும் உணரவேண்டும் அரசின் விதிமுறைகளை மீறி கடை திறப்பது மற்றும் போராட்டங்கள் நடத்துபவர்களை கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அரசின் நடவடிக்கை வெற்றியடையும்.

திருப்பூர் பழைய நிலைக்கு திரும்பவும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இந்த மத அடிப்படைவாத கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர  ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு – கடலூர் சம்பவத்திற்கு இந்துமுன்னணி கண்டனம்

01.05.2020

பத்திரிகை அறிக்கை

வி பி ஜெயக்குமார் இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம்

வணக்கம்!
இன்று காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை தேசிய தலைவராக பார்க்க வேண்டுமே தவிர ஜாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிகப்பெரிய தவறு.

இதனுடைய விளைவாகத்தான் இதுபோன்ற அவமதிப்பு செயல்கள் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இது போன்று நடவாது இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவமதித்த நபரை உடனடியாக கைது செய்த காவல்துறையின் துரித நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும் இந்த தவறான செயலை பயன்படுத்தி கலவரத்தை தூண்ட நினைக்கின்ற நபர்கள், கலவரத்தை தூண்டுகிற மாதிரி வீடியோ பதிவிட்ட அந்த நபர் மீதும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

காவல்துறை எடுக்கின்ற அமைதி நடவடிக்கைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமாறு இந்து முன்னணி வேண்டிக் கொள்கிறது.

இன்று கொரோனா தீ நுண் கிருமியின் கொடூரத்தால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்ற இந்த காலகட்டத்தில் நாம் எல்லோரும் பொறுமையாக இருந்து நிதானமாக சிந்தித்து எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அவலமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்குள் ஜாதி பிரச்சனையால் மேலும் அல்லல் ஏற்படுத்தாமல் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்!! தமிழகத்தை காப்போம்!!

தாயகப் பணியில்
V.P.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்
‌‌

கோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை

30.04.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தற்போது கொரோனா
காரணமாக144
லாக்டவுன்
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்சிறையில்
சிறைவாசிகளை
சந்திக்கும்
நேர்காணல் மற்றும்
வழக்கறிஞர்கள்
நேர்காணல் தடை
செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை காணமுடியாத
சூழ்நிலையில் சிறைவாசிகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது
இயல்பு.

இத்தகைய நேரத்தில்
சிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின்
கடமை.

அதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்
சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி
கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில்
இந்து சிறைவாசிகளை
கொடுமைப்படுத்துவதும்
தனிமைச்சிறையில்
அடைப்பதும் வாடிக்கையாக
இருந்தது.

சிறைத்துறை அதிகாரிகளிடம்
இந்துமுன்னணி பேச்சுவார்த்தை
நடத்தி இந்து கைதிகளுக்கு
பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை
முஸ்லீம் சிறைவாசிகளுக்கு
செய்து தந்த செளகரியங்கள்
ஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்
ரம்ஜான் காலங்களில்
பிரியாணி செய்ய அனுமதிப்பது என
தாராளம் காட்டியது.

இந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்கு
தடைவிதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .
காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி
பண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .

மேலும் கைது செய்யப்பட்டு
சிறைக்கு செல்லும் சிறைவாசிகளை
சோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்
கான்விக்ட் வார்டன்கள்
கடுமையாக தாக்குவது
என பல்வேறு கொடுமைகளை
அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம் .

சென்ற மாதம் கோவையில்
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்
RSS நிர்வாகி சூரிஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம்
சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க
சலுகை வழங்குகிறது
சிறைத்துறை .

அதே சமயம் கடந்தமாதம்
கைது செய்யப்பட்டு
குண்டர்சட்டத்தில்
அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை
தனிமை சிறையில்
அடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.

எனவே கோவை மத்திய
சிறையில் நடைபெறும்
மதரீதியான
பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும்,சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக
விரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து
கொள்கிறோம்.

சிறைத்துறை வார்டன் பூபால்
அவர்கள் முஸ்லீம்களால்
தாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து
சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம் இந்துமுன்னணி.
இதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி
கேட்டுக் கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி