Tag Archives: #police

இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்

மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்

வணக்கம்

நாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.

மேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.

அந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.

மேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை???
இதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது?

தமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,

உயர்திரு தமிழக DGP அவர்கள்

தாயகப் பணியில்

V.P. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ள வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை நிர்வாகம் சிறப்பு சலுகையா?? இந்து முன்னணி கண்டனம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத‌ ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.

என்றும் தாயக பணியில்
V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது

இந்துமுன்னணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் DGP க்கு கடிதம் – சட்டவிரோத போராளிகளினுடைய PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யவேண்டும்.

சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மத்திய , மாநில அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் அதிகமாக தமிழ்நாட்டில் நடந்து வருகின்றது .

இந்த போராட்டங்களை இனிவரும் காலங்களில் ஓரளவுக்கு கட்டுபடுத்த வேண்டுமானால் போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்படும் நபர்களின் பெயர் விபரங்களை CCTNS பதிவேட்டில் எற்றினால் பிற்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு , கடவுசீட்டு , விசா , தனியார் துறை வேலைக்கான PCC சான்றிதழ் , NOC சான்றிதழ் , ஓட்டுனர் உரிமம் போன்ற அத்தியாவசியபணிகளில் அவர்களுக்கு தடை ஏற்ப்படும் .

எனவே PSR தகவல்களை CCTNS ல் பதிவு செய்யப்படவேண்டும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் அதற்கு பயந்து தவறான போராட்ட களத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கமாட்டார்கள் .

ஆகவே தாங்கள் விரைந்து போராட்டத்தில்ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழகத்தை மீண்டும் அமைதி பூங்காவாகமாற்றவும் கேட்டுக்கொள்கிறேன் .

தாயகப் பணியில்

வி.பி. ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

இந்துமுன்னணி

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் இந்துமுன்னணி என்றும் பக்க பலமாய் இருக்கும்

அமைதிப் பூங்காவான தமிழகம் இன்றைக்கு
அராஜக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது.
வன்முறை தலைவிரித்து ஆடுகிறது .

பாதுகாக்கும் காவல் துறைக்கு ஒரு பாதிப்பு என்றால் எந்த அரசியல் தலைவரும் குரல் கொடுக்க மாட்டார்கள் .
இவர்களைப்பற்றி காவல்துறை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாட்டுக்கு காவல் தெய்வமாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு
ஒரு பாதிப்பு என்றால்
எந்த அரசியல் தலைவர்களும்
முன் வராததற்கு காரணம் என்ன ?

அரசியல்வாதி பிழைக்க
காவல்துறை துணை வேண்டும் . ஆனால்
காவல்துறைக்கு ஒரு பிரச்சினை என்றால் அரசியல்வாதிகள் தயங்குவது ஏன்?

அராஜகத்துக்கு துணைபோகும் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளும் காவல்துறையே…!
பொறுத்தது போதும் .

காவல்துறையின்
கையை கட்டிப் போட்ட அரசியல்வாதிகள், என்றும் கூட வர மாட்டார்கள் இது தான் உண்மை.

காவல்துறைக்கே ?
பாதுகாப்பு இல்லை என்றால் ….
காவல்துறை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

காவல்துறையை
தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
முதலமைச்சர் அவர்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும் . இல்லையென்றால் காவல் துறையின் மீது உள்ள பயம் போகிவிடும் .

எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு துணிவான கமிஷனர் இருக்கும்போது இப்படிப்பட்ட ஒரு செயல் நடக்கிறது என்றால் ..!

இந்த அரசாங்கம் சரியில்லை என்று அர்த்தமா? இல்லை முஸ்லீம்களை கண்டால் பயந்து விடவேண்டும் என்று அர்த்தமா? என்று புரியவில்லை.

காவல்துறை சார்ந்த அனைவருக்கும் .
#இந்துமுன்னணி என்றும்
உங்கள் பக்கம் இருக்கும் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்படுகிறோம் .

உங்கள் உடல் விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றோம்…..

தமிழக காவல்துறைக்கு பயமா? – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கேள்வி

தமிழக காவல்துறைக்கு பயமா? இல்லை தமிழக முதல்வர் வாய்மொழி உத்தரவாக காவல்துறைக்கு உத்தரவு போட்டு உள்ளதா?

இஸ்லாமியர்களுடைய அராஜகம் நாளடைவில் வலுத்து வருகிறது இது நல்லதல்ல.

காவல்துறை அதிகாரிகள் மனநிலை பாதிக்கப் படுவார்கள்.

தமிழக முதலமைச்சர் அவர்களே காவல்துறையினர் கை விலங்குகளை அவிழ்த்து விடுங்கள், இல்லையேல் அவர்களே உடைப்பார்கள்.

வி.பி.ஜெயக்குமார்,
இந்து முன்னணி துணைத் தலைவர்,
பரமன்குறிச்சி

காவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்

தீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.

ஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது

ஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.

சிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

2-8-2018

பத்திரிகை அறிக்கை

திரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அவருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.

அதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.

விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.

இறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.

இதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.

இந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

துணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

காவல்துறை அதிகாரி திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி – வீரத்துறவி

பத்திரிகை அறிக்கை
குற்றவாளியை பிடிக்க சென்று பலியான காவல்துறை அதிகாரி
திரு. பெரிய பாண்டியன் அவர்களுக்கு
இதயபூர்வமான அஞ்சலி..
கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. பெரிய பாண்டியன் அவர்கள், குற்றவாளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. அவருடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் காயமடைந்துள்ளார்.
எந்த மாநிலம் ஆனாலும், குற்றவாளிகளை பாதுகாப்போர் தேச விரோதிகள் தான். குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை நடத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதும், திருட்டுப்பொருட்களை மீட்பதும் காவல்துறை அதிகாரிகள் கடமை. காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
இதனை ஊடகங்களும், நடுநிலை அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன் வரவேண்டும். இதுவே, ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் ஒரு குற்றவாளியை தனது தற்காப்பிற்காக சுட்டதாகக் கூறியபோது, மனிதபிமானம் பேசியவர்களே, காவல்துறை ஆய்வாளர் உயிரும் மனித உயிர்தானே? ஏன் மவுனம் காக்க வேண்டும். தமிழகத்திலும் குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளை தாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்துதான் வருகிறது. புழல் சிறை முதல் ஆம்பூர் முதலான பல சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் யாரும் இதுவரை வாய் திறந்து கண்டிக்க முன் வரவில்லை என்பது வருத்தமான விஷயம். குற்றவாளியை பாதுகாக்கும் ஒரு வன்முறை கூட்டம், சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் காவல்துறை அதிகாரிகளை கண்மூடித்தனமாக தாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட கொடுமை, இதனை காவல்துறை உயர் அதிகாரிகளோ, மாநில அரசோ கவலையோடு அணுகி, தீர்வு காண முற்படுவதில்லை என்பதுதான்.
சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும் என்பது சரி. அதே சமயம், குற்றவாளிகளுக்கு மனித உரிமை பேசப்போய் தான் குற்றவாளிகள் தைரியமாக இதுபோன்ற பயங்கரவாத செயல்களை செய்யவும் துணிகிறார்கள்.
குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்போரையும் ஈவுரக்கமின்றி உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடக்காது.
கடமையை செய்ய சென்று பலியான திரு. பெரிய பாண்டியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளத்தூர் காவல்துறை ஆய்வாளர் திரு. முனிசேகர் அவர்கள் விரைந்து குணமடைய தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இரு காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கவும், இது போல் இனிமேல் நடவாமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய உதவிகளை காவல்துறை அதிகாரிகளுக்கு எல்லா மாநில அரசுகளும் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)