Monthly Archives: January 2018

பஸ் ஸ்டிரைக் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை

பஸ் தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்..
அரசு பேருந்து தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் பஸ் ஸ்டிரைக் தொடர்ந்து கொண்டுள்ளது.

தொழிலாளர்களின் ஓய்வோதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்புடையதாக, நியாயமானதாக இருக்கிறது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தை ஆண்டு, ஆளுகின்ற திமுக, அதிமுக அரசுகளின் தவறான நடவடிக்கைகளால் போக்குவரத்துத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள இடதுசாரி தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தயைாகவே செயல்பட்டு வந்துள்ளன.
பேருந்து வேலை நிறுத்தத்தால் கடந்த சில நாட்களாக தமிழத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பலதரப்பட்ட மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலை நிறுத்தம் என்பது எப்படி இருக்கலாம் என்பதற்கும், அரசோ, நிர்வாகமோ முன் எச்சரிக்கையாக எப்படி செயல்படுவது என்றும், ஒரு வரைமுறையை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பொது மக்களிடமும், உண்மையான சமூக அக்கறையுடையோரிடமும் அலசப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வோர் அதிகம். இந்நிலையில் தொடரும் பஸ் ஸ்டிரைக்கால் இது கேள்விக்குறியாகி உள்ளது. திட்டமிட்டு, பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க வேண்டும் என்ற தீய நோக்கில் சில தொழிலாளர் சங்கங்கள் ஸ்டிரைக் தொடரும் என அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. மக்களுக்குத் தொல்லை தருவதால், மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட, சொந்த ஊருக்குச் சென்று திரும்பவும் தேவையான போக்குவரத்து சேவையை தமிழக அரசும், பேருந்து தொழிலாளர்களும் செய்து தர வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)

11.1.18

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு- வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை

9-1-2018
பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பர்யமிக்க தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து,  ஆண்டாள் ஒரு தாசி என பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மொழியை பேசி திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச அருகதை உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினை பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர் பேசிய இடம் திராவிட கழகத்தின் கூட்டமும் இல்லை, அது நாத்திக மேடையும் இல்லை.. அப்படியிருக்க இதுபோன்ற பண்பாட்டு மேடையில் இவரை பேச அழைத்து வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இவர் கூறிய கருத்து.
தமிழகத்தில் மட்டுமல்ல, இம்மாதத்தில் உலக முழுவதும் தமிழ் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டு வருவதை காண்கிறோம்.
ஔவையாரும், ஆண்டாளும் தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்துக்கள் தங்களை உணர்ந்துவிட்டார்கள். இதுபோன்ற நச்சு கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பார்கள்.  வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்கு புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.
நாத்திக கூட்டமல்ல, இது இந்து விரோத கூட்டம்
திராவிடர் கழகத்தின் திருச்சி கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி, திருப்பதி ஏழுமலையானைப் பற்றி விமர்சித்துள்ளார். இவரது பேச்சேல்லாம் கருப்பு சட்டை சிரூடையில், மேடைக்கு முன்னால் நிற்கும் சிலரின் கைத்தட்டலுக்காக இருக்கலாம்.
ஆனால், இவரது கருத்திற்கு இவரது தாய்கூட ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும்.  2ஜி வழக்குத் தீர்ப்புக்கு முன்னர் எத்தனை கோயிலுக்குச் சென்று நேர்த்தி செய்தார்கள் என்ற பட்டியலும் இருக்கிறது.
கனிமொழி ஓன்று அரசியல்வாதியாக இருக்கட்டும், இல்லையேல் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து விரோத கருத்துக்களை பரப்பும் செயலை செய்யட்டும். இந்து விரோத கருத்தை கூறிக்கொண்டு செயல்படுவது, அவர், தான் ஏற்றுக்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி பிரமாணத்திற்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
உலக நாத்திக கூட்டமெனக்கூட்டிய திராவிடர் கழக வீரமணி, அதனை மூடநம்பிக்கையையே வியாபாரமாக நடத்தும் கிறிஸ்தவ மதப்போதகர் எஸ்றா சற்குணத்தை வைத்து துவக்கியதிலிருந்தே இது கடவுள் மறுப்பு கூட்டம் இல்லை, இந்து மத விரோதக் கூட்டம் என்பது உறுதியாகிறது.
கனிமொழி, இதே கருத்தை மற்ற மத நம்பிக்கையின் மீது கூறுவாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் தன்மானமுள்ள இந்துக்களே, `இப்படிப்பட்ட அறிவார்ந்த கருத்துகளை நீங்கள் ஏன் வேற்று மதங்களைப் பற்றியும் ஒரு விஷயத்திலாவது பேச கூடாது?’ எனக் கேளுங்கள். அப்படி தப்பித்தவறி பேசினால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் வாயாலேயே புரிய வையுங்கள்.  ஒன்று அவர்களது இந்துவிரோத செயல்பாட்டை மாற்றுங்கள், இல்லையேல் தன்மானத்தோடு, சுயமரியாதையோடு திமுகவைவிட்டு வெளியேறுங்கள் என திமுகவில் உள்ள இந்துத் தொண்டர்களிடம் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

மாநில செயற்குழு கூட்டம் – சென்னை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டிசம்பர் 30,31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநிலத்தலைவர் திரு. காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.

ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகிலபாரத ஒருங்கிணைப்பாளர் திரு. அசோக்பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் மற்றும்வி ன் டிவி நிர்வாக இயக்குனர் திரு. தேவநாதன், தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. பேரரசு, சூரப்பட்டு சுலக்ஷ்னா மஹால் உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம், கங்கா பவுண்டேஷன் தலைவர் திரு. செந்தில் குமார் ஆகியோர் திருவிளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு.இராம. கோபாலன்ஜி இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்காமல், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத “இந்து அறநிலையத்துறையே பொறுப்போடு செயல்படு”.

2. இந்த ஆண்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தயாராக வேண்டும்”.

3. திருப்பூர் மாவட்டம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி “கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை”.

4. ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை விதிக்காத நீதிமன்றங்களில்- “நீதியின் மாண்பு காக்கப்பட வேண்டும் “.

5. மத்திய அரசின்” முத்தலாக் சட்டத்திற்கு வரவேற்பு”.

6. பழனி “பாதயாத்திரை செல்வோர்களுக்கு அரசே நடைபாதை அமைத்துக்கொடு”.

7.” திருமாவளவனின் இந்து விரோத பேச்சுக்கு கண்டனம்”.

8. R K நகர் தேர்தல் “ஜனநாயகமா? அல்லது பணநாயகமா?”.

9. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத ஜெபகூடங்கள், தொழுகைக் கூடங்களை அகற்ற ” நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் “.

10. திருச்செந்தூர் கோவில் விபத்து” அறநிலையத்துறை அலட்சியத்திற்கு கண்டனம்”

மேற்கண்ட தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.