Daily Archives: June 5, 2020

மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம்

06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்