Daily Archives: May 5, 2020

மதுக்கடைகளை திறக்கும் முடிவு – கொரோனாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கும் முயற்சி- தமிழக நலன் கருதி இதை உடனடியாக கைவிட இந்துமுன்னணி கோருகிறது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

05.05.2020
பத்திரிகை அறிக்கை
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

எதிர்வரும் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.

கொரோனா தாக்குதளில் வெகுவாக பீடித்துள்ள இந்த நிலையில் தமிழக அரசின் இந்தமுடிவு அதிர்ச்சியை அளிக்கிறது.

இதனால் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகி கொரோனா பரவுவது அதிகரிக்கும் என்பது உறுதி.

கொரோனாவுக்கு அரசே சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

வேலை வாய்ப்புகள் இன்றி மக்கள் அன்றாட உணவிற்கே பெருத்த சிரமங்களை சந்தித்து வருகின்ற நிலையில், மதுக் கடைகள் திறக்கப்பட்டால் வீட்டிலிருக்கும் பொருட்களை விற்றுக் குடிக்க மக்களை அரசே தள்ளுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை, பணத்தை மதுக்கடைகள் மூலம் வசூல் செய்ய அரசு இந்த முயற்சியை மேற்கொள்கிறதோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

அரசு மதுக் கடைகளை திறக்க காண்பிக்கும் ஆர்வத்தை, பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோவில் அன்னதான திட்டத்திற்கு காண்பித்தால், மீண்டும் துவக்கினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று இந்துமுன்னணி எண்ணுகிறது.

50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்து காக்க வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் இந்துமுன்னணி பேரியக்கம் கோரிக்கை விடுக்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்

05.05.2020
மாண்புமிகு முதல்வர் அவர்கள்., தமிழக அரசு – சென்னை.அன்புடையீர் வணக்கம்,பொருள் : ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்
கடந்த 40 நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்துள்ளனர். அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.நலவாரியங்களில் பதிவுசெய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு சிறு உதவிகளை செய்து வந்தாலும், உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.இதில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்ட உதவியும் சென்றடையவில்லை.ஆகவே நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எத்தகைய உதவிகளை தமிழக அரசு செய்ததோ, அதே போல பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நல உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.இந்த நேரத்தில் பல தொழில்களுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஊரடங்கிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அத்தகைய விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் இதே நிலை நீடித்தால் பசியின் கொடுமையால் பல இழப்புகள் நிகழ்வதற்கும் வாய்ப்பு உள்ளது.இதனை தாங்கள் கருத்தில் கொண்டு நேரடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.என்றும் தாயக பணியில்காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்இணைப்பு :
1. மாண்புமிகு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
2. உயர்திரு ஆணையாளர் அவர்கள் – தொழிலாளர் நலத்துறை
3. உயர்திரு. இயக்குனர் ஆட்டோ ஓட்டுனர் நல வாரியம்