Daily Archives: February 29, 2020

தமிழகத்தைத் காப்போம்- தமிழகம் முழுவதும் தொடர் நாமாவளி பிரார்த்தனை – மாநிலத் தலைவர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் ஊடுருவியுள்ள பயங்கரவாத பங்களாதேஷ் முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் பதட்டமான சூழலை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்துவரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மற்றும் விஷம் ஊடகங்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும்

ஒருநாள் தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்களில் நடந்த வேண்டும்.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினால் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதை பல வகைகளிலும் அரசு ஊர்ஜிதப் படுத்தியுள்ள நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு வன்முறையை கையிலெடுத்து மக்களின் மனத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசியல் லாபத்திற்காக போராட்டக்காரர்களை தூண்டிவிடும் அரசியல் கட்சிகளை கண்காணித்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி மக்களை குழப்புகின்ற ஊடகங்கள் அவர்களின் கேவலமான பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இறைவன் நல்ல புத்தியை தரவேண்டும் என்ற வேண்டுதலோடு இந்த தொடர் நாமாவளி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது – இந்துமுன்னணி

29.02.2020

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்

கல்வித்துறையில் சில அதிகாரிகளின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது..

பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கை, மன உறுதி, படிப்பில் ஆர்வம், வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனநிலையை ஏற்படுத்த பல்வேறு வகையான பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழிபட்ட காப்புக் கயிறுகள் (ரட்சை) மாணவர்களுக்கு கைகளில் காட்டுவதற்காக வழங்கப்படுவது வழக்கம்.

சில பள்ளிகளில், மாணவர்கள் கட்டியிருந்த (ரட்சை) காப்புக் கயிறை மற்றும் திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து வருவதை கண்டித்து, அவற்றை அகற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு செய்வது மாணவர்களின் தன்னம்பிக்கை, மன உறுதியை குலைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு பயத்திலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களில் சிலரும் தற்கொலை செய்துகொள்வதை காண்கிறோம்.

இவற்றிற்குத் தீர்வாகத்தான் இந்த வழிபாட்டு முறை நடத்தப்பெற்று வருகிறது.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில், மாணவர்களிடம் நல்ல மாற்றமும் தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டுள்ளதை உறுதியாகக் கூற முடியும். ஆன்மிக நம்பிக்கை என்பது அறிவியல் பூர்வமானதும், மனோதத்துவ முறையிலானதும் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. செங்கோட்டையன் அவர்கள் மாணவர்களிடம் உள்ள

சமய நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதுபோல, சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவரும், சமய சின்னங்களை அகற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை மூலம் எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

எனவே, மத காழ்ப்புணர்ச்சியோடும், வெறுப்போடும் செயல்பட்டு, மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தாயகப் பணியில்

சி.பரமேஸ்வரன்
மாநில பொதுச் செயலாளர்