வீட்டை கோவிலாக்கி வழிபாடு நடத்துவோம் – வீரத்துறவி இராம கோபாலன்… புத்தாண்டு செய்திகள்

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
பத்திரிகை அறிக்கை
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
வீட்டை கோயிலாக்கி வழிபாடு நடத்துவோம்..
தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டு, சித்திரை 1ஆம் தேதி. அன்று குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று விசேஷமாக வழிபாடு நடத்துவது நமது மரபு.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் நமது பாரம்பர்யத்தை கைவிடலாமா?
எனவே, புத்தாண்டு வழிபாட்டை நமது வீட்டில் உள்ளோர் அனைவரும், இந்த உலகமும், நமது புண்ணிய பூமியும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல நிலையில் வாழ புத்தாண்டான சித்திரை (14.4.2020) 1ஆம் தேதி அன்று விளக்கேற்றி வைத்து குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வோம்.
அனைவருக்கும் இந்து முன்னணியின் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெறவும், இந்த தீய சூழலில் இருந்து மீண்டு, வளம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *