மாவோயிஸ்ட் – நக்ஸல் – ரெட் அலெர்ட்

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 5 ம் தேதி இரவு மாவோயிஸ்ட் எனப்படும் நக்ஸல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரிடம் இருந்து செல்போன்கள், டேப்லெட், பென் டிரைவ், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 50 ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் தென் மாநில எல்லைப் பகுதிகளைக் குறிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அவர்கள் அடிக்கடி தமிழகத்தின் பலபகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், கோவை எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியும், வனப் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டகாசம் செய்தனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில், கேரளாவில் மாவோயிஸ்ட்களைப் பிடிக்க போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீஸாரிடம் தகவல் கொடுத்திருந்தனர்.

 

ஆந்திர மாநிலப் பகுதிகளிலிருந்தும் பல அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது இந்த நக்ஸல்பாரி குழுக்கள்.  அந்த மாநிலத்தின் உளவுப் பிரிவும் தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசாரின் துப்பு கிடைத்த பிறகு, கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் காரில் வந்த 5 பேர் தாங்கள் வந்த காரை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் 5 பேரும் கோஷம் போட்டபடி போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுத் தலைவர் என்றும் தெரியவந்தது.

அவர் பெயர் ரூபேஷ் (40) என்றும், கேரள மாநிலம், திருசூரைச் சேர்ந்த அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது மனைவி சைனா என்ற திருசூரைச் சேர்ந்த பெண்ணும் பிடிபட்டார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கண்ணன், ஈஸ்வரன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் தமிழகத்தில் பதுங்கியிருக்க இவர்கள் இருவரும் உதவியதாகத் தெரியவந்தது.

கேரளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த ரூபேஷுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர். ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.

தமிழக காவல்துறை எடுபிடித் துறையாக மாறி உளவு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளது மிகவும் வெட்ககேடான விஷயம். அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் மூக்கை நுழைக்காது, தேச பாதுகாப்பினில் அக்கறை செலுத்துவதில் காவல்துறையின் கவனம் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த சிவப்பு நிற ரத்தவெறி பிடித்தவர்கள் தேசத்தின் மிகபெரும் விஷ வித்துக்கள். இன்று மாத்திரமல்ல எப்பொழுதுமே கம்யூனிஸ்ட், அது சார்ந்த நக்ஸல் மாவோயிஸ்ட் போன்ற இயக்கங்கள் தேச விரோதிகளாகவே இருந்து வருகின்றன. மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து, தேசம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என மூளைச் சலவை செய்து, அதற்காக ஆயுதம் ஏந்தி போராடவேண்டும் என மக்களைத் தூண்டி அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றி  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள்.

இந்த தேசத்தின் மரியாதைக்குரிய தலைவர்களை, விடுதலைக்காக தியாகம் செய்துள்ள தலைவர்களை மதிக்காமல் வேறுநாட்டு வதலைவர்களை புரட்சிக்காரர்கள் என்று கொண்டாடுபவர்கள். நேதாஜியை ஜப்பானின் நாய் என்று தூற்றியவர்கள்.

இந்த நாடு அடிமைப்பட்டே கிடக்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலேயரிடம் கெஞ்சியவர்கள்.  சீனத்தையும், ரஷ்யாவையும் தங்களது தேசமாக கொண்டாடுபவர்கள்.

எல்லாவற்றையும்விட இந்த தேசத்தில் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரும் ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சீனத்தில் துவங்கி நேபாளம் வழியாக சத்திஸ்கர், ஜார்கண்ட்,ஓடிஸா, ஆந்திரா, வடக்கு கர்நாடகா, வழியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஈரோடு வழியாக கேரளா வரை மிகப்பெரிய கம்பளம் போன்ற ஒரு வடிவத்தில் இந்த தேசத்தில் கம்யுனிசத்தை நிலைநாட்டிட வேண்டும் என மிகப்பெரிய ஆயுத போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

இதை லட்சியமாக ஏற்று சபதம் செய்து நாட்டை துண்டாக்கிட எண்ணும் மாவோயிஸ்ட் நக்சல்களின் ஒரு குழுவின் தலைவன் மற்றும் சிலர் தான் இன்று கோவையில் பிடிபட்டுள்ளனர்.

இந்த தேசத்தில் எப்படி இஸ்லாமிய பயங்கரவாதம் பரவி புரையோடி வருகிறதோ, கிறிஸ்தவ மதமாற்றம் பரவி புரையோடி வருகிறதோ, அதைப்போலவே இந்த நக்சல் கம்யுனிசத் தத்துவமும் பரவி வருகிறது. இதை வேரும், வேரடி மண்ணுமாக களைந்து எறிவதில் அனைத்து மாநில காவல்துறைகளும், மத்திய அரசும் முனைப்போச்டு இருக்கவேண்டும். இதில் மெத்தனம் காட்டுவது தேசத்திற்கு ஆபத்தாக முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *