தீபாவளி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கடும் கண்டனம்

திருப்பூரில் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.

ஒரு புறம் கள்ள காதலுக்கு ஆதரவாகவும்
இயற்கைக்கு எதிரான ஒரினச்சேர்க்கைக்கு
ஆதரவாக தீர்ப்பு கொடுத்து எய்ட்ஸ் நோய் வருவதை ஊக்கப்படுத்திவிட்டு..

மறுபுறம் தீபாவளிக்கு வருடத்தில் ஒரு நாள்
பட்டாசு வெடித்தால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படும் என தீர்ப்பு சொன்னால் இது நியாயமாக இருக்காது..

இந்து பண்டிகைகளை குறிவைத்து அழிக்க சர்வேச சதி நடப்பதாக இந்து முன்னணி கருதுகிறது.

மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டதை இந்த ஆட்சியாளர்களால் ஏன் அமல்படுத்த முடியவில்லை..? தீபாவளிக்கு மட்டும் அவசர அவசரமாக கைது நடவடிக்கை ஏன்..?

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் இல்லை என்றால் ஆட்சியாளர் வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்து முன்னணி இந்து சமுதாயத்தின் மீது
நடக்கும் தாக்குதலை வேடிக்கை பார்க்காது..
இதற்கு எதிராக தமிழகத்தில் இந்து முன்னணி முன்னின்று போராட்டங்களை நடத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *