திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது – வீரத்துறவி இராம.கோபாலன்

25.09.2020

பத்திரிகை அறிக்கை

திரை இசையில் சாதனை படைத்த திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவுக்கு

இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. தனது வாழ்நாளில் திரைப்பட பாடல்கள், பக்தி இன்னிசை பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி.

திருஅண்ணாமலையாரை போற்றி அவர் பாடிய பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவியது. அதனை கேட்காத தமிழ் உள்ளங்களே இல்லை எனக் கூறலாம்.

பல விருதுகளை பெற்ற எஸ்.பி.பி. அவர்கள் 42 ஆயிரம் பாடல்கள் பாடி என்றும் மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார்.

எஸ்.பி.பி. உடல்நிலை பாதிக்கப்பட்டபோது திரை உலகம் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். இதன் மூலம் அவர் மீது மக்கள் அனைவரும் வைத்திருந்த அன்பு வெளிப்பட்டது.

அன்னாரது மறைவு இசை உலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.

நன்றி,

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்,

(இராம கோபாலன்)

நிறுவன அமைப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *