காவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்டும்

தீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.

ஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக முல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது

ஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *