மாநில செயற்குழு கூட்டம் – சென்னை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் டிசம்பர் 30,31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாநிலத்தலைவர் திரு. காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார்.

ஹிந்து ஜாக்ரண் மஞ்ச் அகிலபாரத ஒருங்கிணைப்பாளர் திரு. அசோக்பிரபாகர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் மற்றும்வி ன் டிவி நிர்வாக இயக்குனர் திரு. தேவநாதன், தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. பேரரசு, சூரப்பட்டு சுலக்ஷ்னா மஹால் உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம், கங்கா பவுண்டேஷன் தலைவர் திரு. செந்தில் குமார் ஆகியோர் திருவிளக்கேற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

மாநில, கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு.இராம. கோபாலன்ஜி இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்காமல், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத “இந்து அறநிலையத்துறையே பொறுப்போடு செயல்படு”.

2. இந்த ஆண்டு எந்தவித சிக்கலும் இல்லாமல் “ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தயாராக வேண்டும்”.

3. திருப்பூர் மாவட்டம் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி “கோவில் நிலத்தை மீட்க கோரிக்கை”.

4. ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் நடை திறப்பதற்கு தடை விதிக்காத நீதிமன்றங்களில்- “நீதியின் மாண்பு காக்கப்பட வேண்டும் “.

5. மத்திய அரசின்” முத்தலாக் சட்டத்திற்கு வரவேற்பு”.

6. பழனி “பாதயாத்திரை செல்வோர்களுக்கு அரசே நடைபாதை அமைத்துக்கொடு”.

7.” திருமாவளவனின் இந்து விரோத பேச்சுக்கு கண்டனம்”.

8. R K நகர் தேர்தல் “ஜனநாயகமா? அல்லது பணநாயகமா?”.

9. அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத ஜெபகூடங்கள், தொழுகைக் கூடங்களை அகற்ற ” நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும் “.

10. திருச்செந்தூர் கோவில் விபத்து” அறநிலையத்துறை அலட்சியத்திற்கு கண்டனம்”

மேற்கண்ட தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *