தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி – மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா அறிக்கை

29.02.2020

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

பத்திரிகை அறிக்கை

தினமலர் குடும்பத்தின் தாய் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் மறைவிற்கு அஞ்சலி

இந்துமுன்னணி மண்டல பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தின் முன்னோடி
பத்திரிக்கையான தினமலர் நாளிதழின் பங்குதார் தெய்வத் திரு. ராகவன் அவர்களின் மனைவியும், ஆசிரியர்
ஆர் . ராமசுப்பு , வெளியீட்டாளர் ஆர்ஆர் . கோபால் ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்புலட்சுமி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது .

பத்திரிகைத் துறையில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு மாபெரும் நிறுவனத்தின் தாயாக, குடும்பத்தின் தலைவியாக, வழிகாட்டியாக விளங்கியவர் .

பலருக்கும் பல்வித உதவிகளை, நல்லாசிகளை வழங்கிய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது .

அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் , அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் .

மேலும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் மார்ச் முதல் தேதியில் காரைக்குடி மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் நடைபெறும். அதில் மறைந்த திருமதி. சுப்புலட்சுமி அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தாயகப் பணியில்

சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *